Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - யார் என்று

படம் : விஸ்வரூபம் (2013)
இசை: ஷங்கர் : இஷான்-லொய்
பாடியவர்கள் : சுராஜ் ஜெகன்
பாடல்வரிகள் : வைரமுத்து





எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம்

நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா இவன் தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமையில்லை
இவன் யாருக்கும் அரசனில்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கும் காயம் இல்லை

எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம்


நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்

விஸ்வல்லா...ஹூ ரக்... விஸ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனோ...மே
விஸ்வல்லா...ஹூ ரக்... விஸ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனோம்

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்

என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்

யார் என்று புரிகிறதா இவன் தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா


யாருக்கும் அடிமையில்லை
இவன் யாருக்கும் அரசனில்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கும் காயம் இல்லை

ரூபம்... ரூபம்... ரூபம்...
ரூபம்... ரூபம்... ரூபம்...
ரூபம்... ரூபம்... ரூபம்... விஸ்வ...ரூபம்


விஸ்வல்லா...ஹூ ரக்... விஸ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனோ...மே
விஸ்வல்லா...ஹூ ரக்... விஸ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனோம்


Popular Posts