Friday, December 14, 2012

Anbe Sivam - Poo Vaasam

படம் : அன்பே சிவம் (2003)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், சாதனாசர்கம்
பாடல்வரிகள்: வைரமுத்து





ஆ.... ஆ....
ஆ...

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சூடும் கண்ணே
நான் தீ வரைந்தால்

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஒவியம் நீயடி…

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சூடும் கண்ணே
நான் தீ வரைந்தால்


ம்... புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஒவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கோடு கூட ஒவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்

என் வெட்கத்தை நிறம் தொட்டு
விரலேண்டும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா....

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சூடும் கண்ணே
நான் தீ வரைந்தால்


ஒவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது

உற்று பார்க்கும் ஆளில் கண்ணில் உள்ளது

பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது

ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது

நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கலைஞன்

மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியொடு விழுந்தாயே வா... ஆ....



பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சூடும் கண்ணே
நான் தீ வரைந்தால்

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஒவியம் நீயடி…


ஆ.... ஆ....
ஆ...


Popular Posts