Tuesday, March 13, 2012

பிடிச்சிருக்கு - காற்றோடு சொல்லி




படம் : பிடிச்சிருக்கு (2008)
இசை : மனு ரமேஷன்
பாடியவர்கள் : கார்த்திக், சாதனா சர்கம்
பாடல் வரிகள் : யுபாரதி



 

(Right click & Save link As)

எங்கே உன் பூ முகம் எங்கே உன் நியாபகம் 
கண்ணே உன் தரிசனம் 
எந்தனாளிலும் எதிரி போலாகும்


காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்


கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்.............


காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 


கருப்பான விடியல் கிடையாது 
சிவப்பான நதிகள் கிடையாது
நினைத்தாலும் தேங்கி போகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது 
எடுக்காமல் புதையல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது


உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஷ்பத்தில் தேன் சொட்டாது


இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது
காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 


உதட்டோர சுழியில் தொலைந்தேனா 
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைந்தேனா
தொலைந்தாயே நீ என்னோடு அதனால் தொலைந்தேனா


வண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிறமெல்லாம் அதனால் தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால் தானா


எதனாலே காதல் பிச்சை கேட்கும் பக்தன் நானா
காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்


கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்.............

Popular Posts