Wednesday, May 11, 2011

கிழக்குச்சீமையிலே - அத்தைக்குப் பிறந்தவளே




படம் : கிழக்குச்சீமையிலே (1993)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் : 
மனோ, சுஜாதா
பாடல் வரி : வைரமுத்து




அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழு நிலவானதெப்போ
மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ


ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே


ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
ஒடக்கர உழவுகாட்டுல
ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஒடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகாது


ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே


மாமனே ஒன்னத் காங்காம
வட்டியில் சோறும் உங்காம
பாவி நான் பருத்தி நாறாப் போனேனே
காகம் தான் கத்திப் போனாலும்
கதவு தான் சத்தம் போட்டாலும்
ஒம் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம்
கத்தியே ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரமானதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே
என் ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே


ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே


தாவணிப் பொண்ணே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா
தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
அயித்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அயித்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும்
தூக்கி வளத்த திண்ணையும் சொகந்தானா
மாமம் பொண்ணே மச்சம் பாத்து நாளாச்சு
ஒம் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு


ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே



ஒடக்கர உழவுகாட்டுல
ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஒடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே

Popular Posts