Monday, February 28, 2011

ரோஜாக் கூட்டம் - மொட்டுகளே




படம் : ரோஜாக் கூட்டம் (2002)
இசை : 
பரத்வாஜ்
பாடியவர் : ஹரிஹரன், சாதனாசர்கம்
பாடல் வரி : பழனிபாரதி







மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள் 
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது


மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது


நீ ஒரு பூ கொடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்


உன் வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன் 
ரோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன் 


நீ ஆகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டைப்பூவாய் பூப்பேன்


மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள் 
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது


காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்


கடற்க்கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்
அலை வந்து அள்ளிச் செல்ல கடலைக் கொல்லப்பார்த்தேன்


உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை
வெட்டப் பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்


மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

Popular Posts