Saturday, February 26, 2011

நான் மகான் அல்ல - இறகைப்போலே



படம் : நான் மகான் அல்ல  (2010)
இசை : 
யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா
பாடல் வரி : யுகபாரதி



இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தை போலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அநியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசைத் தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல்
போலே தொட்டுச்சென்றதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்


கூட வந்து நீ நிற்பதும் கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும் மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே



கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்


ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை ஓ ஹோ ஹோ
என் மீதிலே உன் வாசனை எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே என்னை சேராமல் வாழ்வில்லை ஓ ஹோ ஹோ
நீ என்னைக் காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

Popular Posts