Wednesday, February 23, 2011

செந்தூர பூவே - செந்தூர பூவே இங்கு



படம் : செந்தூர பூவே  (1988)
இசை : மனோஜ் கயன் 

பாடியவர் :  B.S.சசிரேகா, S.P.
பாலசுப்பிரமணியம்

பாடல் வரி : முத்துலிங்கம்







செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு நதி போல என் நெஞ்சம் அலை மோதுதே யே....


ஓ... ஓ... செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா


வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிங்கே களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிங்கே களங்கங்கள் இல்லை
அது தானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா


மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா


அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா


Popular Posts