Thursday, April 11, 2013

உதயம் NH4 - யாரோ இவன்

படம்: உதயம் NH4 (2013)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ், சைந்தவி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்







யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்


எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

மெதுவாக இதயங்கள் இணைகிறதே

உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

நநந... நநந... நநந... நநந...
நநந... நநந... நநந... நநந...


உன் சுவாசங்கள் என்னைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ

உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே 

அலைகளில் மிதந்தது அது தவழ்கிறதே 

கரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே 

நநந... தரரரா... ரரரரா... ரரரா...
தரரரா...  தரரரா... தரரரா... 

எனக்காவே பிறந்தானிவன் 
எனை காக்கவே வருவானிவன் 
என் பெண்மையை வென்றான் இவன் 
அன்பானவன் 
என் கோடையில் மழையானவன் 
என் வாடையில் வெயிலானவன் 
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்


Popular Posts