Sunday, March 17, 2013

பரதேசி - செங்காடே சிறுகரடே

படம் : பரதேசி (2013)
இசை : G.V.பிரகாஷ்
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், ப்ரகதி
பாடல்வரிகள் : வைரமுத்து





ஓ.. ஓ... ஓ... ஓ...


ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... ஓ காடுகளே கள்ளிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே
ஒ... பசியோடு மனுச கூட்டம் வெளியேறுதே
சொத்த கள்ளியும் முள்ளும் தச்சதும் பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீர்த்துடோம் கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... ஓ காடுகளே கள்ளிகளே போய் வரவா


வெளையாத காட்ட விட்டு விளையான்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெகுளி சனம் வெளியேறுதே.... ஓ
வாழ்வோடு கொண்டு விடுமோ சாவோடு கொண்டு விடுமோ
போகும் தெசை சொல்லாமலே வழி நீளுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஹோய்
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பொல்லாத விதியும் மலைக்க போறோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது

பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புளியங்கொட்டைய அவிச்சு தின்னு தான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தீர்க்கவும் பச்சை பூமிய காமி


ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... ஓ காடுகளே கள்ளிகளே போய் வரவா


காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங்காடு கடந்து கல்லுத்து மேடு கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கங்கானி பேச்ச நம்பி சனம் போகுதே... ஓ
நண்டுகள கூட்டி கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீளுமோ உடல் மீளுமோ யார் கண்டது

சொத்த கள்ளியும் முள்ளும் தச்சதும் பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீர்த்துடோம் கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு


ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... ஓ காடுகளே கள்ளிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே
ஒ... பசியோடு மனுச கூட்டம் வெளியேறுதே
சொத்த கள்ளியும் முள்ளும் தச்சதும் பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீர்த்துடோம் கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு


Popular Posts