Saturday, December 8, 2012

டிஷ்யூம் - பூ மீது யானை

படம்: டிஷ்யூம் (2005)
இசை : விஜய் ஆண்டனி  
பாடியவர்கள் : மால்குடி சுபா
பாடல்வரிகள் : புகழேந்தி்

Dishyum





பூ மீது யானை பூ வலியை தாங்குமோ 
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ 
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ 
கண்ணீர் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே 
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

பூ மீது யானை பூ வலியை தாங்குமோ 
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ 


ஏ... உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்துப் பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே... உடையாதே...
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்துப் பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே
காதல் போலவே நோயும் இல்லையே 
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே


பூ மீது யானை பூ வலியை தாங்குமோ 
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ



விலகும் போது நெருங்கும் காதல் 
அருகில் போனால் விலகிடுமோ 
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி 
விருப்பம் போலவே வலி தருமோ... ஆஆ..ஆ..ஆ... ஆ... ஆ...
விலகும் போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ 
வேறு வேறென நினைவு போகையில்
காதல் கொள்தல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்


பூ மீது யானை பூ வலியை தாங்குமோ 
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ 
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ 
கண்ணீர் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே 


Popular Posts