Wednesday, November 7, 2012

தென்றலே என்னை தொடு - புதிய பூவிது பூத்தது

படம்: தென்றலே என்னை தொடு (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல் வரிகள்: வாலி






புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ... சேதி சொன்னதோ...
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ... ஏன்... ஏன்... ஏன்... 


புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது

பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது

என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ

கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ

என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ

கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ

தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ

சத்தமின்றியே முத்தமிட்டதும்
பூபாளம் தான்... வா... வா... வா...

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ... சேதி சொன்னதோ...
தூது வந்ததோ சேதி சொன்னதோ
காதல் கொண்டதோ... சொல்... சொல்... சொல்...


புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது



கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது

கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது

என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ

உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ

என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ

உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ

தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது

உன்னை கண்டதும் என்னை தந்ததும்
உண்டாகுமோ தேன்....


புதிய பூவிது பூத்தது

இளைய வண்டு தான் பாத்தது

தூது வந்ததோ...

சேதி சொன்னதோ...


தூது வந்ததோ...

சேதி சொன்னதோ...


நாணம் கொண்டதோ... ஏன்... ஏன்... ஏன்... 


புதிய பூவிது பூத்தது

இளைய வண்டு தான் பாத்தது

Popular Posts