Friday, October 19, 2012

எங்க ஊரு காவக்காரன் - அரும்பாகி மொட்டாகி


படம் : எங்க ஊரு காவக்காரன் (1988)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி, P. சுசீலா
பாடல்வரிகள்: கங்கை அமரன்


Enga Ooru Kavalkaran




அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி


அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தைக் காட்டு... கையிரண்டசேர்த்து
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஜாதகத்தைப் பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்

மணக்கும் சந்தனம் பூசட்டுமா
இனிக்கும் சங்கதி பேசட்டுமா

எதுக்கும் எங்கப்பனை கேக்கட்டுமா
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா

பொன் ஆவாரம்பூ என் காதோரமா
ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன்நேரம்தான்
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி


பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வாடி புள்ள
பல கதைய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள

பசிக்குப் பந்தியப் போடட்டுமா
ரசிச்சு உன்கிட்ட கூடட்டுமா

தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா
புடிச்சுக் கையில சேக்கட்டுமா

எம் மச்சானுக்கு அட.. என்னாச்சுது
அது பூவாயி பின்னால பித்தானது
அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி


அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி


தொடுத்த மாலை எடுத்து வாரேன்

கழுத்தைக் காட்டு... கையிரண்டசேர்த்து


அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி


அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

Popular Posts