Saturday, May 26, 2012

Vaidehi Kathirunthal - Kaathirundhu

படம் :வைதேகி காத்திருந்தாள் (1984)
இசை:இளையராஜா
பாடியவர் :ஜெயசந்திரன்
பாடல்
வரி: வாலி






ஒ ஒ ஒ.... ஒ... ஒ... ஒ ஒ....
ஒ ஒ ஒ.... ஒ... ஒ ஒ ஒ....

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

ஏ... ஆரிரோ ஆரிரோ ஆரிரோ லு..லு..லு...
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ 

ஆ… ஆ… ஆ… ஆஆஆ… ஆ…
முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்சது இப்ப காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

பாடா படுத்தும் காடா கருப்பா
வாடா நீயும் இறங்கி வாடா
வந்துரு... வந்துரு...தானா வந்துரு...
வந்துரு... வந்துரு...தானா வந்துரு...  இல்லனா...
பாட்டு படிப்பேன், உடுக்கை அடிப்பேன்
சாத்தானோட கூட்டில் அடைபேன்
வந்துரு... வந்துரு...வந்துரு... வந்துரு...
வந்துரு... வந்துரு...வந்துரு... வந்துரு...

நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பி பார்த்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனச
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனச
உள்ளமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

Popular Posts