Saturday, September 3, 2011

ரட்சகன் - நெஞ்சே நெஞ்சே

படம் : ரட்சகன் (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  
K.J.ஜேசுதாஸ், சாதனாசர்கம்
பாடல் வரி : வைரமுத்து








நெஞ்சே நெஞ்சே மறந்து விடு
நினவினை கடந்து விடு
நெஞ்சே நெஞ்சே உறங்கி விடு
நிஜங்களை துறந்து விடு
கண்களை விற்றுத்தான் ஒவியமா
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா
நெஞ்சே நெஞ்சே மறந்து விடு
நினவினை கடந்து விடு
நெஞ்சே நெஞ்சே உறங்கி விடு
நிஜங்களை துறந்து விடு


பெண்ணே பெண்ணே உன் வளையல்
எனக்கொரு விளங்கல்லவோ
காற்றுக்கு சிறை என்னவோ
தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வாழ் வாங்கவோ
கண் மூடி நான் வாழவோ
உன்னை எண்ணி முள் விரித்து
படுக்கவும் பழகிக் கொண்டேன்
என் மேல் யாரும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக் கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன்
உயிர் வலி பொறுத்தேன் என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்


நெஞ்சே நெஞ்சே நெருங்கி விடு
நிகழ்ந்ததை மறந்து விடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்து விடு
நிஜங்களில் கலந்து விடு
கட்டி வைத்த காற்றே வந்து விடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன்... ஹ
நெஞ்சே... நெஞ்சே..
நெஞ்சே... நெஞ்சே...
நெஞ்சே... நெஞ்சே...

அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்று எனை கை விடுமே
விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே
முத்துக்கள் கை வருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமனம் எல்லாம் நிரந்தரமல்ல
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்


நெஞ்சே... நெஞ்சே..
நெஞ்சே... நெஞ்சே...
நெஞ்சே... நெஞ்சே...

Popular Posts