Wednesday, July 13, 2011

Panchalankurichi - Aathoram

படம் : பாஞ்சாலங்குறிச்சி (1996)
இசை : தேவா
பாடியவர் : சொர்ணலதா
பாடலாசிரியர் : வைரமுத்து

Image result for Panchalankurichi




ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்
கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து 
பின்னால வச்சிவிட ஆசை வச்சேன்
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி 
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

மாரளவு தண்ணியில மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க
மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆசை வச்சேன்
பசுவப்போல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்பு பண்ண வேணுமின்னு ஆசை வச்சேன்
உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன்
குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு 
மடி மேல காலைப்போட ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்

மேகாட்டு மூலையில மேகம் கருக்கையிலே
சுக்குத்தண்ணி வச்சித்தர ஆசை வச்சேன்
மச்சும் குளிருகிற மார்கழி மாசத்துல
மச்சானை தொட்டுத்தூங்க ஆசை வச்சேன்
மாமன் கட்டும் வேட்டியில மஞ்சக்கறை என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல ஆசை வச்சேன்
ரெட்டிகுளம் ஆசாரிக்கு பொட்டியில பணம் கொடுத்து
ரெட்டைத்தொட்டில் செய்யச்சொல்ல ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக்கயிறு கட்ட ஆசை வச்சேன்
நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ணெய் தேய்சுவிட ஆசை வச்சேன்
வெந்நீரை கொதிக்க வச்சு மச்சானை குளிக்க வச்சு
மாராப்பு நனையத்தானே ஆசை வச்சேன்
மாந்தோப்பில் கட்டிலிட்டு மனம் போல தொட்டுத்தொட்டு
மாமன் கூட பேசிடத்தான் ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்

Popular Posts