Friday, July 22, 2011

Piriyadha Varam Vendum - Privondrai Santhithen

படம் : பிரியாத வரம் வேண்டும் (2001)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : ஹரிஹரன்
பாடல் வரி : 
வைரமுத்து









பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே... அன்பே... அன்பே... அன்பே...
அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று



ஒரு வரி நீ... ஒரு வரி நான்...
திருக்குறள் நாம் உண்மை சொன்னேன்
தனித்தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே

உன் கைகள் என்று நான் துடைக்கின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போனேன்
பிரிவினாலே நீயாய் ஆனேன்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று



கீழ் இமை நான்... மேல் இமை நீ...
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே


நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குறை
நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே... அன்பே... அன்பே... அன்பே...
அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

Popular Posts