Sunday, April 24, 2011

மன்மதன் - காதல் வளர்த்தேன்



படம் : மன்மதன் (2004)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : 
கே.கே
பாடல் வரி : நா.முத்துகுமார்












காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்


ஏ.... இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
 செடி ஒண்ணு தான் வச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்


ஏ புள்ள புள்ள உனை எங்கே புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உனை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உனை நெஞ்சில் விதைசேன் ஏ புள்ள


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்


பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உனை பார்த்தும் பொழியாதா


பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி
உனக்கேனவே காத்திருந்தாலே
காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே... மானே



தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை


ஏ புள்ள புள்ள உனை எங்கே புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உனை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உனை நெஞ்சில் விதைசேன் ஏ புள்ள


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்


உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஒய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்தெழுவேன்


உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கேனவே தருவேன் பெண்ணே
உன்னருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே... கண்ணே

உனது பேர் எழுதி பக்கத்துல 
எனது பேரை நானும் எழுதி வச்சேன்
அது மழையில் அழியாம குட புடிச்சேன் 
மழை விட்டும் நான் நனஞ்சேன் 
ஏ புள்ள புள்ள...



காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்


ஏ.... இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒண்ணு தான் வச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான் 
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்


ஏ புள்ள புள்ள உனை எங்கே புடிச்சேன் 
ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் 
ஏ புள்ள புள்ள உனை கண்ணில் புடிச்சேன் 
ஏ புள்ள புள்ள உனை நெஞ்சில் விதைசேன் ஏ புள்ள

Popular Posts