Sunday, April 10, 2011

இது நம்ம பூமி - வான மழை போலே




படம் : இது நம்ம பூமி  (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்
பாடல் வரி : வாலி








வான மழை போலே புது பாடல்கள் 
கான மழை தூவும் முகில் ஆடல்கள் 
நிலைக்கும் கானம் இது 
நெடுநாள் வாழும் இது 


வான மழை போலே புது பாடல்கள் 
கான மழை தூவும் முகில் ஆடல்கள் 


இதயம் ராத்திரியில் 
இசையால் அமைதி பெறும் 
இருக்கும் காயமெல்லாம் 
இசையால் ஆறிவிடும் 


கொதிக்கும் பாலையிலும் 
இசையால் பூ மலரும் 
இரும்பு பாறையிலும் 
இசையால் நீர் கசியும் 
பழி வாங்கும் பகை நெஞ்சும் 
இசையால் சாந்தி பெறும் 


வான மழை போலே புது பாடல்கள் 
கான மழை தூவும் முகில் ஆடல்கள் 
நிலைக்கும் கானம் இது 
நெடுநாள் வாழும் இது 


வான மழை போலே புது பாடல்கள் 
கான மழை தூவும் முகில் ஆடல்கள் 



(ம... க ம த நி த.......        க ம க ப நி
த நி ச நி நி ப ச க ப ப ச நி நி 
த ச ம க............     நி ப க ச)



குரலில் தேன் குழைத்து 
குயிலை படைத்தவர் யார் 
மனத்தை மெல்லிசையால் 
இழுத்தே வைத்தவர் யார் 
அறையில் பாட்டெடுப்பேன் 
அரங்கம் தேவை இல்லை 
சபையில் பேர் எடுக்க 
குயில்கள் இசைப்பதில்லை 
எனக்கே நான் சுகம் சேர்க்க 
தினமும் பாடுகின்றேன் 


வான மழை போலே புது பாடல்கள் 
கான மழை தூவும் முகில் ஆடல்கள் 
நிலைக்கும் கானம் இது 
நெடுநாள் வாழும் இது 


வான மழை போலே புது பாடல்கள் 
கான மழை தூவும் முகில் ஆடல்கள் 

Popular Posts