Thursday, April 21, 2011

பூவெல்லாம் உன் வாசம் - தாலாட்டும் காற்றே




படம் : பூவெல்லாம் உன் வாசம் (2001)
இசை : வித்யா சாகர்

பாடியவர் : 
சங்கர் மகாதேவன்
பாடல் வரி :  வைரமுத்து






தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா


உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திரு மேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ
என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ


தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா


கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ
பேசிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் வாசனையை முகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ
அதில் கள்ள தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ


நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டானோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ
என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ


தாலாட்டும் காற்றே வா
தலைகோதும் விரலே வ


ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து
திருநாள் காணாமல் செதொளிந்து போவேனோ
தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி
இலையெல்லாம் உன் பெயரை எழுத்தாமற் போவேனோ
உன் பாதம் வாங்கி நெஞ்சில் பதியாமற் போவேனோ
உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமற் போவேனோ


உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
நீ வாழும் வரை நானும் வாழேனோ
என் உரிமை நீ தானோ
என் உரிமை நீ தானோ

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திரு மேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ
என்னுயிரே நீ தானோ
என்.... யிரே.... நீ தானோ
நீ தானோ.... நீ தானோ....

Popular Posts