Friday, April 8, 2011

மனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்




படம் : மனசெல்லாம் (2003)
இசை : இளையராஜா

பாடியவர் : 
ஹரிஹரன்
பாடல் வரி :  வாலி










நீ தூங்கும் நேரத்தில் 
என் கண்கள் தூங்காது


நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ.. கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என்னுயிரே ஒ.. என்னுயிரே
பூவொன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே... ஒ..


நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே ஆ ...



ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ...
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... 
ஆரிரோ... ஆரிரிரோ... ஆரிரோ...

மடி மீது நீயிருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதாதோ
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ
ஒரு மூச்சில் இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேறாரோ
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஒ ...



நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ.. கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என்னுயிரே ஒ.. என்னுயிரே


கண்ணொடும் நெஞ்சோடும் 
உயிரால் உன்னை மூடி கொண்டேனே
கனவோடும் நினைவோடும் 
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பறிக்கும் மதி முகமே
உன்னொளி அலை தன்னில் நானிருப்பேன்
எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீ தான் நீ தானே ஒ ...



நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ.. கண்மணியே
பூவொன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே... 

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ.. கண்மணியே

கண்மணியே ஒ கண்மணியே
என்னுயிரே ஒ என்னுயிரே

Popular Posts