Monday, April 4, 2011

பசும்பொன் - தாமர பூவுக்கும்



படம் : பசும்பொன் (1995)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : கிருஷ்ணசந்தர், சுஜாதா
பாடல் வரி : வைரமுத்து










தாமர பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல 
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல 


கம்பக்கூழில் போட்ட உப்பு 
கஞ்சி எல்லாம் சேர்தல் போல 
கண்டபோதே இந்த மூஞ்சி 
நெறஞ்சி போச்சு நெஞ்சுகுள்ள 


நாக்குல மூக்கையே ஹே.. ஹே..
தொட்டவன் நானடி 
பார்வையால் உசுரயே ஹோ.. ஹோ..
தொட்டவ நீயடி

தாமரபூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல

மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல 


ஐ.ஆர் (IR) - எட்டு நெல்லப் போல 
அவசரமா சமஞ்ஜ 
அயித்த மக மஞ்சத்துக்கு 
ஆதாரமா அமைஞ்ச 


குட்டி போட்ட பூன போல 
கால சுத்தி குழைஞ்ச 
பாவமின்னு நீவி விட்டா 
பல்லு போட துணிஞ்ச 


சொந்தகாரன் நான் தானே 
தொட்டு பாக்க கூடாதா

கன்னம் தொடும் கை ரெண்டும் 
கீழே கொஞ்சம் நீளாதா

இந்த நாட்டில் தீண்டாமை 
தான் இன்னும் உள்ளதா

வயசுக்கு வந்த பூ ஒஹோ..
ஆசைய பேசுமா 
வண்டுக்கும் பூவுக்கும் ஒஹோ.. 
சண்டையா சத்தமா


தாமர பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல 


மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க 
மாலையும் சூடவில்ல 


கம்மாகுள்ள ஒத்த மரம் 
அங்கே போவோம் மாமா 
கம்மா தண்ணி வத்தும்போது 
திரும்பிருவோம் மாமா

நீச்சல் எல்லாம் சொல்லி தரேன் 
நீயும் கொஞ்சம் வாம்மா 
அங்கே இங்கே கையிப்படும் 
சொல்லிபுட்டேன் ஆமா

நிலா கறைய அழிச்சாலும் 
உன்ன திருத்த முடியாது 


புரட்டி போட்டு அடிக்காம 
ஆமை ஓடு ஒடையாது

போக போக மாமனுக்கு 
புத்தி மாறுது

கிள்ளவா அள்ளவா ஒஹோ ஒஹோ
சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஒஹோ ஒஹோ
பட்டிமன்றம் வைக்கலாம்



தாமர பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல 

மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல 

கம்பக்கூழில் போட்ட உப்பு 
கஞ்சி எல்லாம் சேர்தல் போல 

கண்டபோதே இந்த மூஞ்சி 
நெறஞ்சி போச்சு நெஞ்சுகுள்ள 



மாமனே மாமனே ஒஹோ 
உன்கிட்ட யுத்தமா 
பூமிக்கும் வேருக்கும் ஒஹோ 
சண்டையா சத்தமா


Popular Posts