Sunday, March 13, 2011

திருவிளையாடல் ஆரம்பம் - விழிகளில்



படம் : திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை : D.இமான்

பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா

பாடலாசிரியர் : விவேகா









விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்


யார் என்று நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் எ நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்


காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்


விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய் 


சாலையில் நீ போகயிலே
மரம் எல்லாம் கூடி முனு முனுக்கும்
காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவம் இருக்கும்
யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி


ஒரு கார்பன் கார்ட் என கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்


போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ் நாள் சொர்ப்பமே


விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்


பூவிலே செய்த சிலை அல்லவா
பூமியே உனக்கு விலை அல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரம் அல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி


உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி


இன்றோடு அடி இன்றோடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவித்தான்
என் பொழுதும் விடிந்ததே


எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்



யார் என்று நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் எ நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

Popular Posts