Sunday, August 1, 2010

கோரிபாளையம் - என்ன இந்த

படம் : கோரிப்பாளையம் (2010)
இசை : சபேஷ் முரளி
பாடியவர் :  கார்த்திக், மதுமிதா
பாடல் வரி : நா.முத்துகுமார்



என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே 
கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே 
உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே 
உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே 
நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ 


என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே 
கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே 

ஒஹ்... 
உன் புண் சிரிப்பில் என் உலகத்தையே நான் பார்த்தேனே 
உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே 
நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ 

சின்ன சின்ன புன்னகையில் என்னை பறித்தாய் 
வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய் 
சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே 

மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய் 
மின்மினிக்குள் மின்னலை போல் ஒளி கொடுத்தாய் 
உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில் வந்தாயடா என் அன்பே 

ஒரு பார்வை பார்க்கும் போதிலே என் பாதம் வானம் ஏறுதே 
மறு பார்வை பார்க்கும் போதிலே எந்தன் ஜென்ம சாபம் தீருதே 

என் கால் கொலுசு உன் பேரை சொல்ல நான் கேட்டேனே 

நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ 



என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே 
கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே 

சுற்றி உந்தன் முகமன்றி ஏதும் இல்லையே 
மற்றபடி வேற ஒண்ணும் தொல்லை இல்லையே 
உயிரை எடுக்கிறாய் திரும்ப கொடுக்கிறாய்
திண்டாடுதே என் நெஞ்சம் 

நெற்றி பொட்டில் நேற்று வரை காய்ச்சல் இல்லையே 
நட்சத்திரம் பார்த்து நானும் பேசவில்லையே 
உயிரில் குதிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய் 
கொண்டாடுதே என் நெஞ்சம் 

உன்னை பார்த்து கொஞ்சி பேச தான் எந்தன் ஆசை தாவி ஓடுதே 
உனை பார்த்து பேசும் நேரத்தில் எந்தன் வார்த்தை ஊமை ஆகுதே 

கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா 
உன் இதழ்கள் சொல்லும் 

நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ 

என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே 
கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே

உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே 
உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே 

நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ

Popular Posts