Monday, February 4, 2013

தாம் தூம் - ஆழியிலே

படம் : தாம் தூம் (2008)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரிசரண்
பாடல்வரிகள் : நா.முத்துக்குமார்






ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் விம்மென்ற‌ க‌ன்ன‌த்தில் தின்னென்ற‌ நெஞ்ச‌த்தில்
இச்சென்று இத‌ழ் வைக்க‌வா இச்சைக்கோர் இலை வைக்க‌வா
உன் உம் என்ற‌ சொல்லுக்கும் ம் என்ற‌ சொல்லுக்கும்
இப்போதே த‌டை வைக்க‌வா மௌன‌த்தில் குடி வைக்க‌வா

அக‌ம் பாதி முக‌ம் பாதி நகம் பாயும் சுக‌ம் மீதி
ம‌ரித்தாலும் ம‌றக்காது அழ‌கே
அடிவான‌ம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் கிடந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே
அழகே அழகே வியக்கும் அழகே



Popular Posts