Thursday, January 10, 2013

உயிரை தொலைத்தேன் - சொல்லாமலே கண் முன்

ஆல்பம்: உயிரை தொலைத்தேன் (2011)
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன்
பாடல் வரி: திலீப் வர்மன்




ஹா... ஹா.. ஹா... ஹா...
ஹா ஹா ஹா ஹா
ஹா... ஹா.. ஹா... ஹா...
ஹா ஹா ஹா ஹா


சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே
உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன் எனை மறந்தேன்
தேடும் உறவே நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை தொலைத்தேன்

சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே


இது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே
எதுவரையில் எனக்கிந்த உயிர் வேதனை
எனை அறியாமலே கால்கள் நடைப்போடுதே
வலிக்கூட இந்நேரம் சுகமாகுதே
உன் காலடியில்... கிடப்பது மணலில்லை என் மனம் தான்
என்னைத்தவிர... உந்தன் சுவாசத்தை யாரரிவார்
தூரம் சென்றப்பின் இதயம் சொன்னது இதுதான் காதலா

சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே


நீ முதலா முடிவா உள்ளம் தடம் மாறுதே
முடிவல்ல நிலையென்று உனைப்பார்க்கிறேன்
விடை தெரியாமலே காதலில் கலந்தேனடி
இது என்ன மாயங்கள் புதிரானதே
என் வாழ்க்கையிலே... காதலை உணர்ந்தது உன்னிடம் தான்
என் உணர்வுக்கு நீ... நிழல் தந்த தாய்மையும் நீயல்லவா
தூரம் சென்றப்பின் இதயம் சொன்னது இதுதான் காதலா


சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே
உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன் எனை மறந்தேன்
தேடும் உறவே நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை தொலைத்தேன்



Popular Posts