Sunday, September 4, 2011

புதுப்பேட்டை - புல் பேசும் பூ பேசும்

படம் : புதுப்பேட்டை (2006)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  விஜய ஜேசுதாஸ், தன்விஷா
பாடல் வரிகள் : நா.முத்துகுமார்








ஆஹா.... யே...
புல் பேசும் பூ பேசும் புரியாமல் தீ பேசும்
தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை
பெண் பார்வை வலை வீசும் புயல் வீசும் மழை வீசும்
கடை விரித்துக் கண் வீசும்
நெற்றிப்பொட்டின் மத்தியிலே சுட்டெரிக்கும் பார்வை

மோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம் 
இது தானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேஷம்

ஒரு பக்கம் எரியுதடி மறுபக்கம் குளிருதடி
முன் ஜென்மம் தெரியுதடி
சக்கரத்தில் என்னை வைத்து சுற்றி விடும் காலம்

வா வா என்றது இன்பம் நில் நில் சொன்னது நெஞ்சம்
நீ நான் என்பது மாயை போ போ ஓட்டிடு பேயை

போதையில் நீ விழுந்தால் அங்கே கூச்சங்கள் கிடையாது
பள்ளத்திலே பாயும் நதிகள் மலை மேல் ஏறாது

படைத்தவன் சொன்னாலும் புலிகள் மரத்தில் வாழாது
காலம் வந்து விட்டால் இலைகள் கிளையில் தங்காது

விருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம்
இது தானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேஷம்

உன்னை கூட்டிக்கிட்டு கடைக்குப் போறேன்
உனக்கு வேண்டியத வாங்கித் தாறேன்
என் வீட்டுக்குத் தான் கூட வாடி
எங்கு போனாலும் கூட வா நீ
நேற்று உன்னைப் பார்க்கலையே
அட இன்னிக்கு நான் தூங்கலையே

காலையில என்னாகும் அட கல்யாணம் யாருக்காகும்
காலையில என்னாகும் அட கல்யாணம் யாருக்காகும்

போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுரமாகுமா
போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுரமாகுமா
கெட்டபின் நாணம் ஏனம்மா
அட கட்டிலில் நியாய தர்மமா


Popular Posts