Tuesday, July 5, 2011

Seevalaperi Pandi - Oyila Paadum

படம் : சீவலப்பேரி பாண்டி (1994)
இசை : ஆதித்யன்
பாடியவர்கள் :  K.S.
சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து





ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு

கரிச காட்டு காடையே காடு கொடுத்த ஒடையே
காட்டுக்கு வேலி தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை
ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு

அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு

அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு

இந்த காடே என் வீடு
என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு
மழை வந்தாலென்ன இடி வந்தாலென்ன
நீ துணிஞ்சு விளையாடு துணிஞ்சு விளையாடு
ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு

நான் மூப்போதும் முழிச்சிருகேன்
நான் எப்போதும் தனிசுருக்கேன்
அட ஆஸ்தியும் இல்லை அவஸ்தையும் இல்லை
அன்னாடம் சிரிச்சிருக்கேன்

நான் மூப்போதும் முழிச்சிருகேன்
நான் எப்போதும் தனிசுருக்கேன்
அட ஆஸ்தியும் இல்லை அவஸ்தையும் இல்லை
அன்னாடம் சிரிச்சிருக்கேன்
ஒரு குருவிக்கு கூடு இருக்கு
இந்த குமரிக்கு வீடுருக்கா
அந்த ஆடுக்கு கிடை இருக்கு
ஒரு அடைக்கலம் எனக்கிருக்கா
வெயில் வந்தாலென்ன இருள் வந்தாலென்ன
என் சந்தோசம் கொறஞ்சிருக்கா சந்தோசம் கொறஞ்சிருக்கா

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு
கரிச காட்டு காடையே காடு கொடுத்த ஒடையே
காட்டுக்கு வேலி தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை...

Popular Posts