Sunday, June 5, 2011

கிழக்கு சீமையிலே - மானுத்து மந்தையில



இன்று காலை (05-06-11)
அக்காக்கு பொண்ணு பிறந்த 
சந்தோஷத்தில் இந்த பதிவு....


படம் : கிழக்கு சீமையிலே (1993)
இசை : 
A.R. ரஹ்மான்

பாடியவர் :  S.P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி : 
வைரமுத்து








மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே


நாட்டுக்கோழி அடிச்சு
நாக்கு சொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்தி குடு ஆத்தா


ஒ... மேலு காலு வலிச்சா
வெள்ளப்பூடு உரிச்சி
வெல்லம் கொஞ்சம் போட்டு குடு ஆத்தா


பச்ச ஒடம்புக்காரி...
பாத்து நடக்க சொல்லுங்க


பிள்ளைக்கு தாய்ப்பாலு
தூக்கிக் கொடுக்க சொல்லு


மச்சான திண்ணையில
போத்திப் படுக்க சொல்லு


மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே


தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே


ஆட்டுப்பால் குடிச்சா
அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா
ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம் பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்


வெள்ளிச்சங்கு செஞ்சா
வெளக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்


பச்ச ஒடம்புக்காரி...
பாத்து நடக்க சொல்லுங்க


ஈ எறும்பு அண்டாம
எட்டி இருக்க சொல்லு
மச்சான ஈரத்துணி
கட்டி இருக்க சொல்லு


மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
அய்யோ.. பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே



தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே
ஒய்... சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே


மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
போடே... பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே

Popular Posts