Thursday, May 5, 2011

அழகன் - சாதி மல்லிப் பூச்சரமே



படம் : அழகன் (1991)
இசை : மரகதமணி

பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : 
புலமைப்பித்தன்









சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னனு முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு


சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி


எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்று தான்
கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் 
என எண்ணோனும்
அதில் இன்பத்தை தேடோனும்

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி


உலகமெல்லாம் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனஞ்சி நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னனு முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

Popular Posts