Wednesday, March 2, 2011

பாட்டு பாடவா - நில் நில் நில்



படம் : பாட்டு பாடவா (1995)
இசை : இளையராஜா

பாடியவர் : இளையராஜா, உமா ரமணன்










நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே 
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே 
சென்றாலும் விடமாட்டேனே அன்பே 
தினம் என் அருகில் 
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே 
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே 


நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால் 
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால் 


ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள் 
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள் 


தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ 
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ சொல் நில் 


நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே 
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே 
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே 
சென்றாலும் விடமாட்டேனே அன்பே 
தினம் என் அருகில் 
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே 
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே 

ஒவியமாய் உனை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

கூ கூ கூ என கை கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து மடி தாவிடாதோ சொல்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே

வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே 

நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே 

சென்றாலும் விடமாட்டேனே அன்பே 
தினம் என் அருகில் 

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே 

வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே 

Popular Posts