Wednesday, February 23, 2011

நாடோடி பாட்டுக்காரன் - வனமெல்லாம்




படம் : நாடோடி பாட்டுக்காரன் (1992)
இசை : இளையராஜா

பாடியவர் : 
S.P.பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வாலி






வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ


வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு


வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

ஆத்தோரம் பூங்கரும்பு
காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ
பூத்திருக்கு தாமரப்பூ
பொன்னிறத்து காஞ்சறம்பூ
புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு
எப்போதும் மாராப்பு
எடுப்பான பூந்தோப்பு
என்ன என்ன எங்கும் தித்திப்பு..பு...
ஒட்டாத ஊதாப்பூ
உதிராத வீராப்பு
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பு..பு...
வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு
புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு



வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

கெட்டவர்க்கு மனம் இரும்பு
நல்லவரை நீ விரும்பு
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
ஏழைகளின் நல்லுழைப்பு
என்ன இங்கு அவர் பிழைப்பு
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு
வீணாக இருக்கும் வம்பு
வினையாகும் கைகலப்பு
விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு
கையோடு எடு சிலம்பு
கலந்தாட நிமிர்ந்தெழும்பு
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு
அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு



வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு

வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

Popular Posts