Sunday, February 6, 2011

தென்மேற்குப் பருவக்காற்று - ஏடி கள்ளச்சி



படம் : தென்மேற்குப்பருவக்காற்று (2010)
இசை : N.R. ரஹ்நந்தன்

பாடியவர் :  
விஜய்பிரகாஷ், ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : வைரமுத்து






ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி என்ன புரியலயா
நெஞ்சு நொங்குது நொங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன
நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண
நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன



ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி என்ன புரியலயா


ஒ... அத்த மகன் போல வந்து அங்க இங்க மேய்வ
அத்து வான காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ


முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக
முட்டையிட்ட காடை எங்கே காட்டவிட்டு போக


கிட ஆட்டுகோமியம் கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிழக்கேத்த மாம்பழம் சொல்லு மறுநாளு மாறிவிடும்


நான் பொம்பள கிறுக்குல்ல வல்ல
என் புத்தியில் வேறோன்னுமில்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல் மாறுவதில்ல


நீ வெறும் வாய மெல்லாத விளங்காட்டுல



ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி என்ன புரியலயா

ஆடிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்
ஆக மொத்தம் உன்ன கண்டு ஆடி போச்சு நெஞ்சம்

பித்தம் கொஞ்சம் கூடி போனா இப்படி தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவை கொஞ்சம்

கொடியோட சக்கரைவள்ளி தெரியாம கிழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி அறியாம மனசு வைக்கும்

நீ பட்டுனு முன்ன வந்து நில்லு
என் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குயா முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல பல்லு

நான் முடி போட ரெடி தான்டி முடியா சொல்லு


ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி என்ன புரியலயா
நெஞ்சு நொங்குது நொங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன
நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண
நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன

ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி...



Popular Posts