Tuesday, January 4, 2011

Kallukkul Eeram - Siru Ponmani

படம் : கல்லுக்குள் ஈரம் (1980)
இசை : இளையராஜா
பாடியவர் :  இளையராஜா, S.ஜானகி

பாடல் வரி : கங்கை அமரன்

Image result for Kallukkul Eeram

சிறு பொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மனி பொன்னிமைகளில் தாளலயம்

சிறு பொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மனி பொன்னிமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும் 

சிறு பொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மனி பொன்னிமைகளில் தாளலயம்


விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும் 
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்


தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம் 
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம் 
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்



சிறு பொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மனி பொன்னிமைகளில் தாளலயம்



நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்


விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்

விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்

கதை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்


உயிர் உன் வசம் உடல் என் வசம் பயிரானது உன் நினைவுகள்



சிறு பொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மனி பொன்னிமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும் 

சிறு பொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மனி பொன்னிமைகளில் தாளலயம்

Popular Posts