Tuesday, July 27, 2010

Raja Paarvai - Anthi mazhai

படம் : ராஜபார்வை (1981)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல் வரி : வைரமுத்து

Image result for Raaja paarvai




அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது



அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது


ஆ......... ஆ......... ஆ......... ஆ.........


தேனில் வண்டு மூழ்கும்போது.... ஆ.........
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்


தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இள மயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
அந்தி மழை பொழிகிறது


ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது


தேகம் யாவும் தீயின் தாகம்.... ஆ.........
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது


நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்
அந்தி மழை பொழிகிறது


ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது


ஆ... சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

Popular Posts