Thursday, August 31, 2017

Irumbu Kuthirai - Penne Penne

படம்: இரும்பு குதிரை (2015)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்: G.V.பிரகாஷ், பவதாரணி, யாழினி
பாடல் வரிகள்:  தாமரை


Related image



ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...
ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...

பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி அழுகிறேன் 
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன்  

நீ சொல்லாததால் மொழி இல்லை 
நீ செல்லாததால் வழி இல்லை 
நீ பாராததால் ஒளி இல்லை 
நீ தாராததால் நிழல் இல்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும்  
நான் உன்னை உன்னை 

ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...

ஓ... பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி அழுகிறேன் 


காற்றை தூதாக நான்விட 
கண்ணே உன் கூந்தல் கோதி பாறாதோ 
உன் கண்ணின் மை பூசி நீவிட 
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ 
முன்னம் முன்னூறு ஆண்டுகள் 
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம் 
ஏங்கி நான் பெற்ற என் வரம் 
ஐயோ இப்போது யாரிடம் 
உன்னை பாராது முத்தம் தாராது 
இனி தூங்காது என் கண்களே 


பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி கரைகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன்  

நீ சொல்லாததால் மொழி இல்லை 
நீ செல்லாததால் வழி இல்லை 
நீ பாராததால் ஒளி இல்லை 
நீ தாராததால் நிழல் இல்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும்  
நான் உன்னை உன்னை 

Wednesday, August 30, 2017

Gemini Ganeshanum Suruli Raajanum - Ammukuttiye

படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017)
இசை: D. இமான்
பாடியவர்: ப்ரதீப் குமார்
பாடல் வரிகள்:  யுகபாரதி


Image result for Gemini Ganeshanum Suruli Raajanum



அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி

செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கன்னுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி
அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


தங்க செல போல மங்கிடாம என்ன ஓரசி போகுற‌
அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற
ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுற‌
முத்தம் ஒண்ணு கேட்டா மின்சாரம் போல கட்டாகுற‌
பொங்க வைக்கும் நீ பால் நொற நெஞ்ச தொட்ட மூணாம்பிற
சொகமா... உசுர... கவ்வுற...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


எத்தனையோ பேர‌ தள்ளி போனு சொல்லி ஜெயிச்ச ஆம்பள
உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல
தள்ளுவண்டி போல முன்னால நானும் தள்ளாடல...
முன்ன வந்து நீயும் கிக்காக‌ பேச உக்காரல‌
ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல
நெசமா... கதையும்... சொல்லல...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி
செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி...

Monday, August 21, 2017

Megha - Putham Pudhu Kaalai

படம் : மேகா (2014)
இசை : இளையராஜா 
பாடியவர் : S.ஜானகி 
பாடல்வரிகள் : கங்கை அமரன் 


Megha 2014.jpg




புத்தம் புது காலை... பொன் நிற வேளை...
என் வாழ்விலே... தினந்தோறும் தோன்றும்...
சுக ராகம் கேட்கும்... எந்நாளும் ஆனந்தம்...
புத்தம் புது காலை பொன் நிற வேளை


பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ
மனதின் ஆசைகள்... மலரின் கோலங்கள்
குயில் ஓசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்

புத்தம் புது காலை பொன் நிற வேளை...


வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது

புத்தம் புது காலை... பொன் நிற வேளை...
என் வாழ்விலே... தினந்தோறும் தோன்றும்...
சுக ராகம் கேட்கும்... எந்நாளும் ஆனந்தம்...

Wednesday, August 16, 2017

Vivegam - Kadhalaada

படம்: விவேகம் (2017)
இசை: அனிருத்
பாடியவர்கள்: ப்ரதீப் குமார், ஷாஷா திருப்பதி
பாடல் வரிகள்: கபிலன் வைரமுத்து


Image result for Vivegam


உன்னோடு வாழ்வது ஆனந்தமே...
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே...
தீராத தேவைகள் ஆனந்தமே... ஆனந்தமே...
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே...


காதலாட காதலாட காத்திருந்தேனே...
ஆசை நூலில் பாசபூக்கள் கோர்த்திருந்தேனே...

செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே

ஓயாத தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே...

உன்னோடு வாழ்வது ஆனந்தமே...
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே...
தீராத தேவைகள் ஆனந்தமே... ஆனந்தமே...
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே...


நீலவானம் மாய்ந்த போதும் நீ இருப்பாயே...
தேவகானம் தூய மெளனம் நீ கொடுப்பாயே...

பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே...
நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே...

ஆலகால நஞ்சு பாய்ந்தது மெல்ல மீள்வோமே...
பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட வாழ்வு நீள்வோமே...

உன்னோடு வாழ்வது ஆனந்தமே...
உன்னோடு வாழ்வது ஆனந்தமே...
உன்னோடு உன்னோடு... வாழ்வது....
உன்னோடு வாழ்வது ஆனந்தமே...

Wednesday, August 2, 2017

Vikram Vedha - Yaanji

படம்: விக்ரம் வேதா (2017)
இசை: ஷாம் C.S 
பாடியவர்கள்: அனிருத், சக்திஸ்ரீ கோபாலன்
பாடல் வரிகள்: மோகன்ராஜ்

Vikram Vedha poster.jpg




யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
வந்து வந்து நிக்குற... ஏன்...
என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து
உன்னில் சிக்க வைக்குற... ஏன்...

கனாவென‌ முளைக்கிறாய்
இமையனைக்கயில் நான்...
வினாவென வளைகிறேன்
உன்னை நினைக்கையில்... ஏன்...

ஓ... நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே...
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ... ஓ... ஹோ
நீ என்பதே நான் என்கிற நீயே...
ஓ... நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே...
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ... ஓ... ஹோ
நீ என்பதே நான் என்கிற நீயே...

யாஞ்சி... ஏன்...


மென்மையாய் மெல்ல நகரும் எந்தன் நாட்குறிப்பில்
வன்மையாய் நீ வந்து சேரும் மாயம் என்ன...
என்னவோ செய்கிறாய் என் ஆயுள்
எல்லைகள் போல் ஆகிறாய்

ஓ... ஓ... ஓ... ஓ... ஹோ...
காந்தமாய் என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்று
சாந்தமாய் என்னை கட்டிபோடும் ஜாலம் என்ன
கேட்கிறேன் கூறடி பெண்மையே...

வாழ்க்க‌ போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது

நீ எந்தன் பாதி என்றும் நானும் உந்தன் மீதி என்றும்
காதல் காதுக்குள்ள வந்து ஓதுது.

ஓ... ஓ... ஓ... ஓ... ஹோ  யாஞ்சி...
ஓ... ஓ... ஹோ 
ஓ... நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே...
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ... ஓ... ஹோ 
நீ என்பதே நான் என்கிற நீயே...
ஓ... நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே...
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ... ஓ... ஹோ 
நீ என்பதே நான் என்கிற நீயே...

யாஞ்சி ஏன்...

Popular Posts