Friday, August 26, 2016

Dharmadurai - Aandipatti

படம்: தர்மதுரை (2016)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: செந்தில்தாஸ், சுர்முகி
பாடல்வரிகள்: வைரமுத்து


Dharma Durai(2016 film) Poster.jpg




ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...

ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலையே
நான் உச்சந்தலையில் 
சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே 
 
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச
 
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா

ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...


ஓஹோ.. தாலிகட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த
 
தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த
 
கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா
 
நண்டை சீண்டும் நரி தான் ஓயுமா
 
நீ மஞ்சக்கரு வேலம்ப்பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான்தான் புள்ள


ஓ... மெய்யாகுமா வேப்ப எண்ணை நெய்யாகுமா
 
பெண் மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா
 
ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா
 
என்னை எழுதித்தாரேன் போதுமா
 
ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான்
அண்ணன் அண்ணன்னு சொல்லிக்கூப்பிட்டேன்
ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்

ஓஹோ... ஓஹோ... ஓஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஓஒஹோ...
ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்கா பொம்பளையே 
என்ன முழுசா நம்பலையே
நான் உச்சந்தலையில் 
சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே

உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச

ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா 

ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே 

Dharmadurai - Poi Vaada

படம்: தர்மதுரை (2016)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: ஸ்ரீமதுமிதா
பாடல்வரிகள்: வைரமுத்து

Dharma Durai(2016 film) Poster.jpg



போய் வாடா என் பொலி காட்டு ராசா
போராடு சிறு மலையெல்லாம் தூசா
நல்லது செய்ய நெனச்சா 
நல்ல நேரம் ஏதுக்கு
நம்பிக்கை உள்ள மனசுக்கு
நாலு தெசையும் கிழக்கு
போய் வாடா என் பொலி காட்டு ராசா
போராடு சிறு மலையெல்லாம் தூசா

வைகை நதி நடந்தா
வயக்காடு முந்து விரிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்
எட்டு வச்சு போடா இவனே
நெற்றிகண் தெறடா சிவனே
வெற்றிதான்டா மகனே

போய் வாடா என் பொலி காட்டு ராசா


Thursday, August 25, 2016

Dharmadurai - Endha Pakkam

படம்: தர்மதுரை (2016)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: சின்மயி, ராகுல் நம்பியார்
பாடல்வரிகள்: வைரமுத்து


Dharma Durai(2016 film) Poster.jpg




எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு
ஒரு காதல் தோல்வி காணும்போதும் காதலுண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு

அட ரோஜா பூக்கள் அழுதால் அது தேனை சீந்தும்
என் ராஜா பையன் நீ அழுதால் அதில் ஞானம் மீஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்
எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு


அப்பொதுமே இன்பம் என்றால்
முன்னேற்றமே ஏது
எப்பொதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காது
மனசை சலவை செய்ய‌
ஒரு கண்ணீர் கதி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய‌
ஒரு காதல் க‌தி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்த காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு

ஒ... ஒஒ...

சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோசமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத்தானோ நீ தாய்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரை தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட‌ ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே
ஒ... ஒஒ...
எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நான் எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு
நீ தாவி தாவி தழுவும்போதும் தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு முன்னால்
என் வாழ்வே உன் பின்னால்
உன் மடியில் எந்தன் கண்ணீர் வழியுமடி
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்


Wednesday, August 3, 2016

Eetti - Naan Pudicha

படம்: ஈட்டி (2015)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ், சக்திஸ்ரீ கோபாலன்
பாடல்வரிகள்: ஏகாதசி


Image result for Eetti





நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாத
வேல் குத்தி கொல்லாத
போகாது உன் கிறுக்கு

என் உசுர திருடிபுட்டு
ஏன்டா பையா அடகுவச்ச
கண்ணாடி பொம்மநா பாத்துக்க பாத்துக்க
கையால என்னத்தான் போத்திக்க‌ போத்திக்க‌
சாச்சாயி சொல்லால‌ மூச்செல்லாம் உன்மேல
காத்தாகி உன்ன தொடுவேன்


மீச கொண்டு ஊசி நான் போடணும்

ஆசை வைச்ச ஆள தான் பாக்கணும்

பாயிக்கு லீவு விட்டாயே

நோய்க்கு டோக்கன் தந்தாயே

நாற்காலியா நான் மாறவா
தேவதையே உட்கார வா

தூரம் தானே ஈரம் பேசும்
அருகே வந்தால் மோசமாய் போகுதே

நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே


போனு நம்பர் போதைய ஏத்துது

பேச்சு இப்போ பாதைய மாத்துது

நூலின்றி ஊசி கோர்த்தேனே

மீன் வாங்கி சாம்பார் வச்சேனே

ஒ... ஹைகூ பேச்சா ஆரம்பிச்சி
நாவல் போலே ஆகிப்போச்சே

பட்டாம்பூச்சி ரெக்கை வாங்கி
இதயம் ரெண்டில் வண்ணங்கள் பூசுதே

ஏ... நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாத
வேல் குத்தி கொல்லாத
போகாது உன் கிறுக்கு

Thaarai Thappattai - Aattakkari Maman Ponnu

படம் : தாரை தப்பட்டை(2016)
இசை : இளையராஜா
பாடியவர் :  மானசி, பிரசன்னா
பாடல் வரி : இளையராஜா






ஆட்டக்காரி மாமன் பொண்ணு
கேக்க வேணும் கசக்கி தின்னு
கூட்டு சேந்து போட்டு தாக்க வா
கிட்ட வா கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா
உன்ன விரட்டி புடிக்க தான்
ஒரு விருப்பம் பொறக்குது
ஏன் மொறச்சி பாக்குற
வெட்டி வெறுப்பு ஏத்துற
என் ராத்திரி பூராத்தையும்
நீ கெடுத்து போட்டியே


நேத்து பாத்த வயசு போச்சு
மாத்து மாத்து பேச்சை மாத்து
கேட்டு கேட்டு புளிச்சி போச்சுடி
ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி
என்ன வெரட்டி புடிக்க தான்
வந்து தொறத்தி பாக்குற
அடி வெறுப்பு எத்துற
வெறும் வேடிக்க காட்டுற
உன் தூக்கமே போச்சுன
அதில் எனக்கு பொறுப்பில்ல


என் மனசு உனக்கு சரியா தெரியுமே
அடடா வயசும் ஆச்சு உனக்கு புரியுமே

நீ சிரிக்கும் சிரிப்பு விரிக்கும் புகையில
வச்சிக்கோ தளுக்கும் மினுக்கும் திருநாள் ஆட்டத்துல

பித்தானதோர் பொண்ணு மனச
மச்சான் மச்சான் என்ன நெனச்ச

கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில
பூ பூக்கும் செடியும் மொளைக்குமா


நீ இருக்கும் எடம் தான்எ னக்கு கோவிலயையா
மனச தொறந்து பேசு சொல்ல வாயில்லையா

சொல்லா கதை உள்ள கெடக்கு
இல்லாதது எங்க இருக்கு

எனக்கு முடியல
உன்னைவிட்டா போக வழியுமில்ல
ஒத்தையில நாச்சொல்ல விதியில்ல

Monday, August 1, 2016

Kannedhirey Thondrinal - Chinna Chinna Kiliye

படம்: கண்ணேதிரே தோன்றினாள் (1998)
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம், மகாநதி ஷோபனா
பாடல்வரிகள்: வைரமுத்து






சின்ன சின்ன கிளியே 
பஞ்சவர்ண கிளியே 
சின்ன சின்ன கிளியே 
பஞ்சவர்ண கிளியே 
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா 
தேன் மொட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா 
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா 
கண்ணால் கண்டால் நீ சொல்லு 
உன் காலில் விழுவென் நீ சொல்லு 
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே 


நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா 
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா 
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா 
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா 
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா 
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா 
கண்ணால் கண்டால் நீ சொல்லு 
உன் காலில் விழுவேன் நீ சொல்லு 
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே 


எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன் 
அங்கே இங்கே காணோம் என்று 
அடி வானிலே நானேறினேன் 
கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா 
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளும் சென்று பார்த்தாயா 
தூறல் போடும் அவளின் முகிலே உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா 
பஞ்சு போல நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா 
கண்ணால் கண்டால் நீ சொல்லு 
உன் காலில்  விழுவேன் நீ சொல்லு 

சின்ன சின்ன கிளியே 

பஞ்சவர்ண கிளியே 
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா 
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா 
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா 
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா 
கண்ணால் கண்டால் நீ சொல்லு 
உன் காலில் விழுவென் நீ சொல்லு 
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

Popular Posts