Sunday, December 14, 2014

Thanikattu Raja - Sandhana Kaatre

படம் : தனிக்காட்டு ராஜா(1982)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள்: வாலி


Image result for Thanikattu Raja





சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோ ஹோய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை


நீர் வேண்டும் பூமியில்... னனன 

பாயும் நதியே... னனனன
நீங்காமல் தோள்களில்... னனனன 
சாயும் ரதியே... லலலல

பூலோகம் ..... தெய்வீகம்... 

பூலோகம்...... மறைய மறைய
தெய்வீகம்..... தெரியத் தெரிய 
வைபோகம்தான்... 
தனனனனனனனனனனனன


கோபாலன் சாய்வதோ...  னனனன

கோதை மடியில்...  னனனன
பூபாணம் பாய்வதோ...  னனனன
பூவை மனதில்...  னனனன
பூங்காற்றும்..... சூடேற்றும் ....
பூங்காற்றும்..... தவழத் தவழ
சூடேற்றும்..... தழுவத் தழுவ
ஏகாந்தம்தான்... 


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோ ஹோய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே 

செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா

Saturday, December 13, 2014

Raagangal Maaruvathillai - Vizhigal Meeno

படம்: ராகங்கள் மாறுவதில்லை (1983)
இசை: இளையராஜா
பாடியவர்: S.P.பால சுப்பிரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து









விழிகள் மீனோ மொழிகள் தேனோ

நிலவின் மகளே நீதானோ

விழிகள் மீனோ மொழிகள் தேனோ

நிலவின் மகளே நீதானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீதானோ


குழலில் மேகம் குடியிருந்தாலும்

விழியில் ஏதோ புதுவித தாகம்
பௌர்னமி பார்வை பொழிகிறதே
மனந்தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்
இடையின் பாகம் நூலாகும்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ...தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ 

விழிகள் மீனோ மொழிகள் தேனோ

நிலவின் மகளே நீதானோ


அடடா கால்கள் அழகிய வாழை

நினைத்தால் மணக்கும் ரகசிய சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
இவள் தான் இங்கே கலை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம் 
நாயகி பாதம் நாயகன் வேதம் 
நீயே காதல் தேவாரம்

விழிகள் மீனோ மொழிகள் தேனோ

நிலவின் மகளே நீதானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ...தா...னோ

Friday, December 12, 2014

Maharasan - Rakoozhi Koovum

படம் : மகராசன் (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல் வரி : வாலி


Image result for maharasan tamil movie





அடி ராக்கோழி கூவும் நேரம் 

நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு 

அடி ராக்கோழி கூவும் நேரம் 

நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு 
அந்த ஏற்ககாடு ஊட்டி போல 
குளிர் ஏராளம் ஏறிப்போச்சு 
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க 
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க வா மாமா
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்திப் பாடு

அட ராக்கோழி கூவும் நேரம் 

நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு 


தட்டி தட்டி தவுல மெல்ல தட்டி 

விடியும் வர கச்சேரி வெக்கலாமா 
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம் 
நீ வித்தைகள காட்டாம நிக்கலாமா 

கட்டி கட்டி இறுக உன்ன கட்டி 

அழகுருக்கும் கொஞ்சாமல் செல்லலாமா
என்ன வேணும் என் எண்ணங்கள நானும் 
உங்கிட்ட வந்து காத்தோடு சொல்லலாமா 

அடி நீ என்ன கேட்டாலும் தாரேன் 

அந்த தோப்போறம் வான்னாலும் வாறேன் 

விடிஞ்சாலும் மாமா

விடமாட்டேன் ஆம்மா 

அட ராக்கோழி கூவும் நேரம் 

நம்ம ராசா..ங்கம் ஆகிப்போச்சு 


கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி 

கலந்திருக்க வந்தாச்சு திருநாளு 
கன்னி தோளு கை தொட்டு கொஞ்சும் ஆளு 
என் வள்ளிக்குப்பம் கொண்டாடும் வடிவேலு 

சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி 

புடிச்சுப்புட்டே இந்நேரம் வல வீசி 
மெத்தப் போட உன் மந்திரத்திலாட 
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மராசி 

நிலா எம்மேல தீயாட்டம் காயும் 

இப்போ உம்மேல எம்மேனி சாயும் 

அடி ஆத்தி ஆடு

சுதி ஏத்திப் பாடு 

அடி ராக்கோழி கூவும் நேரம் 

நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு 

குளிர் அடிக்க அடிக்க

கட்டிப் புடிக்க புடிக்க 
குளிர் அடிக்க அடிக்க
கட்டிப் புடிக்க புடிக்க வாம்மா வா 
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்திப் பாடு 
அட ராக்கோழி கூவும் நேரம் 
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு


Popular Posts