Thursday, April 24, 2014

Chellamae - Kummi Adi

படம் : செல்லமே (2004)
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள் : சந்தியா
பாடல் வரிகள் : வைரமுத்து







தந்தனனா…. தான தந்தனனா…. 

தான தந்தனனா…. தான தந்தனனா…. 
தந்தனனா…. தான தந்தனனா…. 
தான தந்தனனா…. தான தந்தனனா…. 
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி


அடி செக்க சிவந்த அழக
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்த்ததில்லயடி நானும்
அந்த ராஜகதவ திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பயனும்
பைத்தியம் ஆக வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
அடி பஞ்சு மெத்தையிலே... 
ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவிலே... 
அட இரண்டுமே ஜெயிக்குமே

கும்மியடி பொண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பொண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி


ஒரு பெண்ணுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்பா
அடி உறவு மட்டுமே நினைப்பா
டுத்தி போன சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்பா
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்பா
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
அடி உங்க வீட்டுக்குள்ளே லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 

Tuesday, April 8, 2014

இவன் வேற மாதிரி - லவ்வுல

படம் : இவன் வேற மாதிரி (2013)
இசை : சத்யா .C
பாடியவர்கள் : சத்யா.C, மதுஸ்ரீ
பாடல் வரிகள் : விவேகா


Ivan Veramathiri Poster.jpg




லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்திட்டேன்
என் கவல கவல கவல கவல மறந்திட்டேன்
அவள அவள அவள அவள நெனச்சிட்டேன்
இப்ப பகல பகல பகல இரவ தொலச்சிட்டேன்
வெண்ணையில செஞ்ச செல சென்னையில பாத்தேன்
அன்னையில இருந்து நான் என்னவோ ஆனேன்
ஆனேனே ஆனேனே ஏதேதோ ஆனேனே
போனேனே போனேனே எங்கேயோ போனேனே


நீ செல போல இருக்கேனு சொல்ல முடியல
அடி செலயெல்லாம் உன்ன போல ஆசை கொடுக்கல
ஒரு நதி போல இருக்கேன்னு எண்ண முடியல
நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல
இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்குறது
பிரம்மனோட வேலை
உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது
மூடில் இருந்தான் போல
என் காதல் சொல்ல வச்சிட்ட
என்ன மீனாக துள்ள வச்சிட்ட
என்னாச்சோ ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ


என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற
அடி வலியின்னா என்னான்னு நல்லா காட்டுற
ஒரு எறும்பாக சிறுசா தான் காதல் தெரியுது
அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது
எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திறுத்த முடியும்
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்
தல மேல வானம் உரசும்
தலைகீழா எல்லாம் தெரியும்
ஏதேதோ ஆனேனே எங்கேயோ போனேனே

லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழிந்திட்டேன்
நான் அவள அவள அவள அவள நெனச்சிட்டேன்


இவன் வேற மாதிரி - என்ன மறந்தேன்

படம்: இவன் வேற மாதிரி (2013)
இசை: C.சத்யா
பாடியவர்: மதுஸ்ரீ
பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்





யார் அவனோ அவனோ... யார் அவனோ அவனோ...
யார் அவனோ அவனோ... அவனோ...

ம்..ம்…ஹும்…ஹும்.... ம்..ம்…ஹும்…ஹும்....
ம்..ம்…ஹும்…ஹும்.... ம்..ம்…ஹும்…ஹும்....

என்ன மறந்தேன்... எதற்கு மறந்தேன்...
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க... என்னை மறந்தேன்...
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்... என் ஊரை மறந்தேன்...
என் தோழிகளை மறந்தேனே
என் நடை மறந்தேன்... என் ஓடை மறந்தேன்...
என் நினைவினை மறந்தேனே
அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்....

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...
ஒ.. ஏன் என்னை மறந்தேன்
நான் என்னை மறந்தேன்

கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டி தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்

யார் அவனோ அவனோ... யார் அவனோ அவனோ...
யார் அவனோ அவனோ... அவனோ...


பெண் மனம் கவரும் கொற்றர்க்கு...

தாழ் பணிந்தேன்... தாழ் பணிந்தேன்... 

படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னை பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்ட கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்

யார் அவனோ அவனோ

ஏன்  மறந்தேன்....

யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ

என்னை... மறந்தேன்....

ம்..ம்…ஹும்…ஹும்.... ம்..ம்…ஹும்…ஹும்....
ம்..ம்…ஹும்…ஹும்.... ம்..ம்…ஹும்…ஹும்....


முப்பொழுதும் உன் கற்பனைகள் - கண்கள் நீயே

படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012)
இசை:  G.V. பிரகாஷ்
பாடியவர்: சித்தாரா 
பாடல்வரிகள்: தாமரை





கண்கள் நீயே... காற்றும் நீயே
தூணும் நீ... துரும்பில் நீ
வண்ணம் நீயே... வானும் நீயே
ஊணும் நீ... உயிரும் நீ

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ... வேறில்லை

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
கண்கள் நீயே... காற்றும் நீயே
தூணும் நீ... துரும்பில் நீ
வண்ணம் நீயே... வானும் நீயே
ஊணும்நீ... உயிரும் நீ


இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் தேனே தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்
ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயே... காற்றும் நீயே
தூணும் நீ... துரும்பில் நீ
வண்ணம் நீயே... வானும் நீயே
ஊணும்நீ... உயிரும் நீ

Popular Posts