Monday, June 30, 2014

இது கதிர்வேலன் காதல் - அன்பே அன்பே

படம்: இது கதிர்வேலன் காதல் (2014)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹாரிஸ் ராகவேந்திரா, ஹரிணி
பாடல்வரிகள்: யுகபாரதி




அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

ஓ… அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

என் மேஜை மீது பூங்கொத்தை...
என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த சாரலும் நீ தானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்

அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்


தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை

வழி தரும் கார்முகிலே
நீ மிதந்திடும் மயில் இறகே
இதம் தரும் இன்னிசையே
நீ ஒளி தரும் என் திசையே

இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரைகிறதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சரிகிறதே

ஓ... அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்


உன்னைப் பார்க்க கூடாது என
கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்

உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு

உடைகளின் நேர்த்தியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ

ஓ... அன்பே அன்பே எல்லாம் அன்பே


தேசிங்கு ராஜா - ஒரு ஓர ஓர

படம்: தேசிங்கு ராஜா (2013)
இசை: D.இமான்
பாடியவர்: பல்ராம்
பாடல்வரிகள்: யுகபாரதி







ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்போ சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே
இறுமாப்புல என்ன பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே
தட்டு கெட்டு போனேன் புள்ள முத்தம் ஒண்ணு தாயேன்
கட்டிக்கிட்டு காதல் பண்ண கம்மா கர வாயேன்
ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே 


ஒண்ணே ஒண்ணு சொல்லட்டுமா பிடிவாதமா
என்னை மட்டும் கொல்லுறியே அநியாயமா
பசிக்காம கூட போகுமானு நூறு யோசன
படுத்தாலும் கூட பாதி ராவில் தேடுறேன் ஒன
நெஞ்சுக்குள்ள உன்ன நான் தான் உப்பு மூட்ட தூக்க வேணும்
கொஞ்சம் கூட நோகாமலே மெத்த வேட்டையாடணும்
ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே 


ம்... தப்பு பண்ணி உன்னிடமே அடி வாங்கணும்
அப்ப என்ன தொட்டிட நீ துளி ஏங்கணும்
உனக்காக நாளும் ஓடியாடி வேல பாக்கணும்
உடல் வேர்வையால சேர்த்த காசில் சேலை வாங்கணும்
செப்பு செல போல உன்ன மொத்தத்துல காக்க வேணும்
செத்து விட சொன்னாலுமே உனக்காக சாகணும்

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே 
இறுமாப்புல என்ன பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே
தட்டு கெட்டு போனேன் புள்ள முத்தம் ஒண்ணு தாயேன்
கட்டிக்கிட்டு காதல் பண்ண கம்மா கர வாயேன் வாயேன் 

வாயேன்... வாயேன்... வாயேன்...
வாயேன்... வாயேன்... வாயேன்...

அலெக்ஸ் பாண்டியன் - ஓய் மாமா

படம் : அலெக்ஸ் பாண்டியன் (2013)
இசை : தேவிஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் : கார்த்திக்
பாடல்வரிகள் : விவேகா







யோவ் நான் என்ன சொன்னேன், பட்ஜெட்டுல வாசிங்க...
ஒரு தவிலு, ஒரு நாதஸ்வரம், ஒரு ஜிங்சாக் போதும்ன்னு சொன்னேன் இல்ல. இப்படி திருவிளையாடல் படத்துல வர பாலையா குருப் மாதிரி செட்டு செட்டா வந்தா,  எவன் துட்டு கொடுக்குறது. மத்தவங்க எல்லாம் சாமான் தூக்கிகிட்டு கிளம்புங்கடா 

எல்லாம் கிராண்டா இருக்கணும்னு, உங்க மாப்பிள்ளதாங்க சொன்னாரு...


மாப்பிள்ளையா, எவன்டா அது மாப்பிள்ளை...


மச்சான்... நான் தான் மச்சான்

நெனச்சேன்...

என்ன மச்சான் நீங்க சாங்கு நேரத்துல பைட் பண்ணிக்கிட்டு 
ஏய்  ஒத்து நீ ஒத்து... ஏய் தவிலு நீ குத்து...  ஏய் நாது நீ ஊது...


ஓய் மாமா பொண்ண தான்னு திமிரா கேட்டது ஒரு காலம்
இப்ப மேட்ரிமோனியல் பொண்ண தேடி லூசா அலையுறோம்
நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நைபர் பேரே தெரியாது
ஆனா பேஸ்புக்குல உலகம் பூரா ப்ரண்ட தேடுறோம்
ஏய் புள்ள மீனாட்சி உன் அண்ணன் வேல என்னாச்சி
இப்படி எல்லாம் இப்போ நாம எங்க பேசுறோம்
எல்லார் கையிலும் செல்போன்னு
அதில் சினிமா பாட்டு ரிங்டோனு
மனசவிட்டு பேச மறந்து போலி வாழ்க்க தான் வாழுறோம்
தக்க தைய்யா தக்க தய்யா தக்க தய்யா 
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட்ய்யா
ஏய்... தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா  
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமய்யா
 
அங்க பாத்தியா பொம்பளிங்க கூடயே ஆடுறான், டேய் நீ ஆம்பளங்க கூட ஆடவே மாட்டியா... வா எங்கூட ஆடு 

அட போங்க மச்சான் நீங்க மூட ஸ்பாயில் பண்ணிகிட்டு
ஏ... அப்பனோட அப்பன் பேர மறக்குறோம்
புள்ளைக்கு சச்சின் டோணி பெயர வச்சி வளக்குறோம்
அப்ப அப்ப அத அத கத்து தர மறந்துட்டு பின்னால புலம்புறோம்
டிவி பொட்டி முன்ன நித்தம் கெடக்குறோம்  
அதில் தெம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்  
பாக்கவந்த சொந்தங்கள் காக்க வச்சி  பாசத்த பஞ்சராக்கி அனுப்புறோம்
ஓய்... தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா
அட குத்துப்பாட்டு கேட்கத்தான் இப்ப பச்ச குழந்தையும் தூங்குது
தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட்டய்யா ஹோய்... 
தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா  
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமய்யா ஹோய்... 


மச்சான் வாங்க மச்சான் இப்ப ஆடலாம்

எதுக்கு என் முட்டி ஒடையறதுக்கா 
இந்த மூவ்மெண்டெல்லாம் என்னால ஆட முடியாது, என்ன உட்ரா



ஏய்... கட்டு கட்டு பணம் வந்து பலனில்ல
உன்ன கட்டிக் கொள்ள சொந்தம் வேணும் மாப்பிள்ள
நாடு நாடு சுத்தினாலும் வீடு வந்து
சேரும் போது நிம்மதி பொறக்குமே
அண்ணன் தம்பி சண்ட கூட நடக்கலாம்
அதில் ஆளுக்கொரு பல்லு கூட ஒடையலாம்
வேறொருத்தன் யாரோ வந்து அண்ணன் மேல  
கைய வச்சா தம்பி மனம் துடிக்குமே
ஏய்... காக்கான்னு சொன்னாலே காக்கைக்கும் கூட்டம் வரும்
பாழான மனுசன் தானே பாதி பாதியா வாழுறான்
தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா
ஹே... இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட்டய்யா ஹோய்... 
தக்க தைய்யா தக்க தைய்யா தக்க தைய்யா  
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமய்யா ஹோய்... 


Sunday, June 29, 2014

டமால் டுமீல் - போகாதே போகாதே

படம் : டமால் டுமீல் (2014)
இசை : S. தமன்
பாடியவர்கள் : ரம்யா நம்பீசன்
பாடல்வரிகள் : தாமரை






போகாதே... போகாதே...
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை நீ... நீங்காதே...
நல்லதோர் வீணை செய்த பின்பு
கொல்லையில் வீசி செல்லும் முன்பு
என்னை நீ பிரிந்து
செல்ல செல்ல செல்ல செல்ல
என்னுயிர் பறந்து செல்லுமே
போகாதே... போகாதே...
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே


உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி
நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்
அன்பாலே மறவேன்
என் சேலை தன்னை போர்வையாக்கி
நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்
முத்தங்கள் இடுவேன்
காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்
காதிலே வந்து தைக்கும் உள்ளம்
வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை
என்றால் நானும் ஏன் வாழவேண்டும் சொல்
போகாதே... போகாதே...
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே


ஹே நானும் நீயும் மாலை மாற்றும்
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்
சொல்லாமல் சிதையும்
மோதிரங்கள் வாங்கும் போது
முத்து வைர கற்கள்  கற்கள் உடையும்
முகூர்த்தம் தவறும்
அன்றிலாய் வாழ நானும் வந்தேன்
அன்னமாய் பாலே தானே தந்தேன்
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி வாழ்ந்து
வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்

போகாதே.. போகாதே...
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே


நெடுஞ்சாலை - தாமிரபரணியில்

படம்: நெடுஞ்சாலை (2014)
இசை: C. சத்யா
பாடியவர்கள்: C. சத்யா
பாடல்வரிகள்: கார்த்திக் நேதா






தாமிரபரணியில் நீந்தி வந்த... வந்த... வந்த...
என் ஆவாம் பூவிலையே... இலையே... இலையே...
ஆயிரம் கனவ நீ வெதச்சுப் புட்டு
கை வீசி போறவளே
கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல
மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச
எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச
கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே
பெரும் காமுடியே
அடியே உருவாஞ்சுருக்கே

பத்துப் பனிரெண்டு மணி வர நானும்
கண்ட படி திரிஞ்சேன்
பொட்டப் புள்ள இவ பாத்துட்டு போனா
பொட்டிக்குள்ள அடஞ்சேன்

ஒத்தத் துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி
இஷ்டப்படி கெடந்தேன்
பொட்டுக் கன்னி இவ சிரிச்சிட்டு போனா
எட்டு மொற குளிச்சேன்
மருதாணி எல போல என் மனச நசுக்குறே
அருக்கானி அழகா தான் என் உசுர குடிக்குறே
ராட்டின தூரிய போல என்ன
அடி ஏண்டி உருள விட்ட
பொள்ளாச்சி சூட்டு தச்சி
கண்காச்சி பாக்கையில
அன்னாசி பழம் போல 
என்ன வெட்டி தின்ன அடி...

அடியே கொடுவா நுனியே...
அடியே கருவா ஒளியே...


சல்லிப் பய இவன் மனசுல நீ தான்
மல்லிச் செடிய வச்சே
ஓட்டக்காசு என்ன உருப்படியாக்கி
நெஞ்சுக் குழியில் வச்சே
அடிப்போடி ஒன்ன பாத்தா
ஒரு கிறுக்கு புடிக்குதே
தல மேல ஒரு மேகம்
அட தமுக்கு அடிக்குதே
கோழிய போல என் உறக்கத்த நீ
அட வெரச முழுங்குறியே
வித்தாரக் கள்ளி ஒன்ன கொத்தாக அள்ளி வந்து
பொத்தான போட்டுச் சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா
தனியே தனியே 
அருவா மினுங்கும் விழியே

Thursday, June 5, 2014

மஞ்சப்பை - பாத்து பாத்து

படம் : மஞ்சப்பை (2014)
இசை : N.R. ரகுநந்தன்
பாடியவர்கள் : ஹரிஹரசுதன், வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடல் வரிகள் : யுகபாரதி






பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணு பூத்து பூமி தட்டையாச்சு

உன்ன பாத்து தானே நிழலும் வெள்ளையாச்சு 
ஆச கூடி போக அணிலும் சிங்கமாச்சு

தாலி செய்ய சொல்லு நீயும் தேவயில்ல வெட்டி பேச்சு 

பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணு பூத்து பூமி தட்டையாச்சு


கோழி ரெக்க உன்ன பார்த்து வானவில்லு ஆனேன்
கொஞ்ச நேரம் உன்ன பேசி கண்ணதாசன் ஆனேன்

குட பந்து நீயும் தீண்ட  பூமி பந்து ஆனேன்
கூரு கத்தி கண்களால ஊதுவத்தி ஆனேன்

நூலு கண்டு உன்னால் கோலி குண்டு ஆனேன்

பாத மண்ணு ஏனோ பூசுமஞ்சள் ஆனேன்

ஜோடியாக நீயும் சேர  பட்டுபூச்சி பட்டம் ஆனேன்

பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணு பூத்து பூமி தட்டையாச்சு


நேத்து உன்ன பார்த்த பின்பு தூங்கலானு போனேன்
கனவில் நீயும் துரத்தி அடிக்க தோத்துதான போனேன்

தோத்து நீயும் போடுறேனு கோபமாகி போனேன் 
கொஞ்சிடாம போனியேனு சாப்பிடாம போனேன்

உன்ன எண்ணி நானே ஒல்லியாகி போனேன்

புள்ளி நீயும் வைக்க கோலமாகி போனேன்

கூடு விட்டு கூடு பாய கோக்கு மாக்கு ஆகி போனேன்

பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணு பூத்து பூமி தட்டையாச்சு

உன்ன பாத்து தானே நிழலும் வெள்ளையாச்சு 
ஆச கூடி போக அணிலும் சிங்கமாச்சு

தாலி செய்ய போறேன் நானும் தேவயில்ல வெட்டி பேச்சு


Popular Posts