Wednesday, November 16, 2011

ஜே ஜே - உன்னை நினைக்கவே



படம் : ஜே ஜே (2003)
இசை: பரத்வாஜ்
பாடியவர் : ரேஷ்மி
பாடல் : வைரமுத்து






உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே



உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

நீ கேட்கையில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே



நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்
கண்மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண் முன்பு தோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்
நீ என்னைக்கேட்டபோது காதலில்லை
நான் காதலுற்ற போது நீயுமில்லை
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம்

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே



என் சாலை எங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம்
என் கண்கள் சாய்ந்ததுண்டு வீழ்ந்ததில்லை
காட்சி யாவும் புதைந்து போனது
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்
ஓ... ஓ... உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து போகுதே
என் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல



உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே



உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

நீ கேட்கையில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே



Tuesday, November 8, 2011

நினைத்தேன் வந்தாய் - என்னவளே என்னவளே


படம் : நினைத்தேன் வந்தாய் (1998)
இசை : தேவா
பாடியவர்கள் : அனுராதா ஸ்ரீராம், மனோ
பாடல்வரிகள்: பழனி பாரதி

Image result for ninaithen vanthai mp3 songs tamil




லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு
ஜாலி டைப் பாட்டு கேட்டா ஆடுதுந்த வயசு

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்
என் கண்கள் தேடிடும் காதல் நீ தான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீ தான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்


உயிரில் பூப்பறித்த காதலியும் நீ தான்
உள்ளம் தேடுமொரு தேவதையும் நீ தான்

இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீ தான்
இளமை நனைய வரும் பூ மழையும் நீ தான்

வேர்க்க வைத்தாய் நீ தான் நீ தான்
விசிறி விட்டாய் நீ தான் நீ தான்

தேடி வந்தாய் நீ தான் நீ தான்
தேட வைத்தாய் நீ தான் நீ தான்

புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீ தான்

தெரியாமல் என் மனதைப் பறித்ததும் நீ தான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான்


என்னை மூடிவிடும் வெண்பனியும் நீ தான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீ தான்

என்னை உறங்க வைக்கும் தலையணையும் நீ தான்
தூக்கம் கலைத்துவிடும் கனவுகளும் நீ தான்

மோகங்களும் நீ தான் நீ தான்
முத்தங்களும் நீ தான் நீ தான்

புன்னகையும் நீ தான் நீ தான்
கண்ணீரும் நீ தான் நீ தான்

கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீ தான்

ஒளிந்தவளை அருகில் வந்து அணைத்ததும் நீ தான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்கவைத்தாய் நீ தான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்
கனவினிலே கனவினிலே காக்கவைத்தாய் நீ தான்
என் கண்கள் தேடிடும் காதல் நீ தான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீ தான்

Popular Posts