Tuesday, July 27, 2010

Madharasapattinam - Pookkal Pookkum

படம் : மதராபட்டினம் (2010)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் :  ரூப்கமர், ஹரிணி, ஆண்ட்ரியா, G.V. பிரகாஷ்
பாடல் வரி : நா.முத்துகுமார்

 Madharasapattinam (Original Motion Picture Soundtrack) by G.V. ...

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே

உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே

நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ

இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ...


வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே

நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே

வாள் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இதயத்தை இவன் வெப்பம் வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......




எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே

என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுமே

யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்

ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ....

Madharasapattinam - Aaruyire

படம் : மதராபட்டினம் (2010)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் :  சோனு நிகம், சந்தவி
பாடல் வரி : நா.முத்துகுமார்

Madharasapattinam (Original Motion Picture Soundtrack) by G.V. ...

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்




விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்

காற்றினில் மாய்வேனோ ஓ … ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே

உயிரே என்னுயிரே உனக்குள் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்






கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்

கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ

உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே



Kutty - Feel My Love

படம் : குட்டி (2010)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் :  கே.கே
பாடல் வரிகள் : விவேகா

Kutty Movie Song Lyrics - Divi Editz Lyrics



Feel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love


என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love


என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ

வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ
Feel my love... Feel my love...
Feel my love... Feel my love...



என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love




நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும் போது Feel my love
என் வீதி தெரியும் ஜன்னல் மூடும் போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும் போது
ம் Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லாய் கூட‌
Feel my love... Feel my love...

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love



கைவிசிறி போலே உன் கை தீண்டும் வர
ம் வேண்டாம்
மின் விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பண்ணிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே
Feel my love... Feel my love...


என் காதல் சரியோ தவறோ...
என் காதல் முள்ளோ மலரோ...
என் காதல் சரியோ தவறோ...
என் காதல் முள்ளோ மலரோ...
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

Kutty - Yaaro En Nenjai

படம் : குட்டி (2010)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் :  சாகர்
பாடல் வரிகள் : தாமரை

Kutty Movie Song Lyrics - Divi Editz Lyrics





Song Download



யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே



ஓ பேச சொல்கிறேன் உன்னை
நீ ஏசி செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே



ஓ பாதி கண்களால் தூங்கி
என் மீதி கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

Kutty - Nee Kadhalikkum

படம் : குட்டி (2010)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் :  முகேஷ்
பாடல் வரிகள் : செல்வராகவன்

 Kutty Movie Song Lyrics - Divi Editz Lyrics

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
Lets go...


நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே


அவ பார்க்கலேன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலை தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான் இங்கு இல்லையே
குத்திபுட்ட கை எடுக்காதே
அவ கொட்டினாலும் கோவ படாதே


லவ் லவ் லவ் போட்டி இல்லா லவ்
வேஷம் போடா தேவை இல்லை one side லவ்
Love love love வார்த்தை இல்லா love
கனவுகளே வாழ்த்த போகும் one side love


நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே


என்ன ஒகே வா?



ஹே கைய தொட்டா முத்தமிட்டா
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே
அவ மேலே பட்ட காத்துக்காக அட
ஏங்கும் தான் one side காதலே
ஹே பத்து நாளு காத்திருப்பேனே
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிற்ப்பேனே
அவ திட்டினாலும் துப்பினாலும் கவலை இல்லையே
உள்ளங்கையில் வச்சிருப்போமே
அவளை நெஞ்சுக்குள்ளே தச்சிருப்போமே

Love love love காத்திருக்கும் love
கத்தியிலே கைய கீறும் one side love
Love love love தண்ணி போடும் love
மனமில்லே ரோஷமில்லே one side love
நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே




யே தோக்க தோக்க காதல் கூடும் 
நெஞ்சுக்குள்ள தெம்பு ரொம்ப ஜாஸ்திடா
ஹே ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி 
வந்த காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா
ஹான் ஹான் ஹான்

கமல் அஜித் சூர்யா இல்லடா
நம்ம கிட்ட கட்டு கட்டா நோட்டும் இல்லடா
வெறும் மனச மட்டும் பார்த்து காதலிக்கதான்
கொஞ்சம் நீயும் டைமுகொடேன்டா 
அதுல வந்த காதல் பெயர சொல்லும் டா

ஹே Love love love டெலிபோன் பூத் love 

அவ குரலை மட்டும் கேட்டு வைக்கும் one side love ஹே
Love love love புனிதமான love
எந்த ஆம்பளைக்கும் மொதல்லே வர்ற one side love


Goa - Idhu Varai

படம் : கோவா (2010)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  அஜீஸ், ஆண்ட்ரியா
பாடல் வரி : கங்கை அமரன்

Goa (Original Motion Picture Soundtrack) by Yuvan Shankar Raja on ...




இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே



இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்


அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்


இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்




மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே 

Popular Posts