Wednesday, December 29, 2010

அலைபாயுதே - எவனோ ஒருவன்



படம் : அலைபாயுதே (2000)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  
சொர்ணலதா
பாடல் வரி : வைரமுத்து





எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் 
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் 

எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 

எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் 
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் 

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் 
கேட்பதை அவனோ அறியவில்லை 
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே 
அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை 

எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 

புல்லாங்குழலே பூங்குழலே 
நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே பூங்குழலே 
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே 
உனக்கும் எனக்கும் சரி பாதி 
கண்களை வருடும் தேனிசையில் 
என் காலம் கவலை மறந்திருப்பேன் 
இன்னிசை மட்டும் இல்லையென்றால் 
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் 

 எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 

நள தமயந்தி - என்ன இது



படம் : நள தமயந்தி (2003)
இசை : ரமேஷ் வினாயகம்

பாடியவர் :  சின்மயி, 
ரமேஷ் வினாயகம்
பாடல் வரி : 
நா.முத்துகுமார்




என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது



என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ 
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ 
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ 



என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ 
பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ 


காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ 
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ 


எதுவுமே... எதுவுமே... எதுவுமே... 
எதுவுமே... நடக்கலாம் 
இறகின்றி இளமனம் பறக்கலாம் 


இதுவரை... விடுகதை 
இனிவரும் கதை ஒரு தொடர் கதை


வேண்டும் வசந்தம் வாசல் வரலாம் 


ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது 
என்ன இது என்ன இது என்னை கொல்வது 

என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


காற்றடிது அணைவதில்லை காதல் அகல் தான் 
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான் 


கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது 
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது 


இனி வரும்..................................................... 
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்


உனக்கு நான்.... பிறந்தவள் 
மனமென்னும் கதவை தான் திறந்தவள் 


காதல் பிறந்தால் காவல் கடக்கும் 


போட்டு வைத்த கோட்டுக்குள்ளே 
காதல் என்றும் நின்றதில்லை 

என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ 
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ 
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ 

டூயட் - என் காதலே



படம் : டூயட் (1994)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  
S.P. பால சுப்பிரமணியம்
பாடல் வரி : 
வைரமுத்து





என் காதலே என் காதலே, 
என்னை என்ன செய்யப் போகிறாய்? 
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, 
என் கண்ணிரண்டை கேட்கிறாய்? 


சிலுவைகள் சிறகுகள், 
ரெண்டில் என்ன தரப் போகிறாய்? 
கிள்ளுவதை கிள்ளிவிட்டு, 
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்? 


என் காதலே என் காதலே, 
என்னை என்ன செய்யப் போகிறாய்? 
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, 
என் கண்ணிரண்டை கேட்கிறாய்? 


காதலே நீ பூ எறிந்தால் 
எந்த மலையும் கொஞ்சம் குழையும், 
காதலே நீ கல் எறிந்தால் 
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் 


இனி மீள்வதா இல்லை வீழ்வதா? 
உயிர் வாழ்வதா இல்லை போவதா? 
அமுதென்பதா விஷம் என்பதா? 
உன்னை அமுத-விஷமென்பதா? 


என் காதலே என் காதலே, 
என்னை என்ன செய்யப் போகிறாய்? 
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, 
என் கண்ணிரண்டை கேட்கிறாய்? 


காதலே உன் காலடியில் 
நான் விழுந்து விழுந்து தொழுதேன் 
கண்களை நீ மூடிக்கொண்டாய் 
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்


இது மாற்றமா, தடுமாற்றமா? 
என் நெஞ்சிலே, பனி மூட்டமா?
நீ தோழியா? இல்லை எதிரியா? 
என்று தினமும் போராட்டமா? 


என் காதலே என் காதலே, 
என்னை என்ன செய்யப் போகிறாய்? 
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, 
என் கண்ணிரண்டை கேட்கிறாய்?  


சிலுவைகள் சிறகுகள், 
ரெண்டில் என்ன தரப் போகிறாய்? 
கிள்ளுவதை கிள்ளிவிட்டு, 

Love Today - Yen Pennendru

படம் : லவ் டூடே (1996)
இசை : சிவா
பாடியவர் : 
 ஹரிஷ் ராகவேந்திரா
பாடல் வரி : வைரமுத்து




ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன 
என் பனிபூவே மீண்டும் பார்த்தால் என்ன

ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 


நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பெயர் சொன்னால் 
உன் காலடியில் கிடப்பேன் 

தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம் 
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் 
இரண்டில் ஒன்று சொல்லிவிடு 
இல்லை நீயே கொல்லியிடு


ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 



நோகாமல் பிறர் காணாமல் 
உந்தன் ஆடை நுனி தொடுவேன் 
என்ன ஆனாலும் உயிர் போனாலும் 
ஒரு தென்றல் என்றே வருவேன் 


நீ என்னை பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் 
நீ என்னை பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம் 
இமயம் கேட்கும் என் துடிப்பு 
ஏனோ உனக்குள் கதவடைப்பு

ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன 
என் பனிபூவே மீண்டும் பார்த்தால் என்ன

ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 

ரட்சகன் - கையில் மிதக்கும்



படம் : ரட்சகன் (1997)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  
ஸ்ரீனிவாஸ்
பாடல் வரி : வாலி




கனவா... இல்லை காற்றா...
கனவா... நீ.. காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டே
இந்திரலோகம் போய் விடவா 
இடையில் கொஞ்சம் வலியெடுத்தாலும்
சந்திர தரையில் பாயிடவா

கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ 

நிலவில் பொருள்கள் எடை இழக்கும் 
நீரிலும் பொருள் எடை இழக்கும் 
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி...
அதை கண்டு கொண்டேனடி...

ம் .. நிலவில் பொருள்கள் எடை இழக்கும் 
நீரிலும் பொருள் எடை இழக்கும் 
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி...
அதை கண்டு கொண்டேனடி...

காதல் தாய்மை இரண்டு மட்டும் 
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் 
பசியோ வலியோ தெரியாது

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் 
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால் 
உயரம் தூரம் தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால் 
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் வந்தோரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ


கனவா... நீ.. காற்றா... 
கனவா... நீ.. காற்றா... 

Popular Posts