Monday, April 25, 2016

Spirit Of Chennai - Manithan - Humanity Universal

ஆல்பம்: மனிதம் (Spirit of Chennai | Humanity Universal) 2016
இசை: C. கிரிநாத்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், ஹரிஹரன், அருணா சாய்ராம், சுஜாதா, விஜய் பிரகாஷ், கார்த்திக், மாணிக்க விநாயகம், S.P.சரண், சின்மயி,  ஹரிசரண், நரேஷ் ஐயர்,  ஸ்வேதா மோகன், தர்ஷணா, சுசீத்ரா, சக்தி கோபாலன், விஜய் கோபால், கோபால் ராவ், கானா பாலா, அந்தோணிதாசன், மரண கானா விஜி, தேவநாத் பாஸ்கரா, துர்வ், அக்‌ஷிதா,   ரா.பார்த்திபன், சியான் விக்ரம், சித்தார்த்,காக்கா முட்டை ரமேஷ் & கஷீரா, பாலாஜி வேணுகோபால்
பாடல் வரிகள்: மதன் கார்கி, ரோகேஷ், கானா பாலா









மக்கள் பொக்கிஷமாக காப்பாத்தின பல விஷயங்கள்
மழை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது
அதில் ஜாதி மதமும் ஒன்று
தயுவு செய்து யாரும்
அதை தேடி தந்துவிடாதீர்கள்

ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்

ஒரு நாள் அலைகள் சீறுமே
விழுந்தால் உடனே எழுந்திடுவோம்


ஒரு நாள் புயல்கள் தாக்குமே
எதிர்த்தே நாங்கள் பூத்திடுவோம்
ஒரு நாள் அலைகள் சீறுமே
இணைந்தே எம்மை காத்திடுவோம்

தன்னைபின் வைத்து இவ்வுரே தன் உறவுகள் என்று
என்னும் உணர்வே சென்னை
சாதி மதம் தாண்டி தெரு நாயை செடி கொடியை கூட
காக்கும் துணிவே சென்னை
என் சென்னை இது ஊரல்ல
எந்தன் மூச்சாகும்
என் சென்னை இது பேரல்ல
எந்தன் கொண்டாட்டம்
என் சென்னை இது ஊரல்ல
எந்தன் மூச்சாகும்
என் சென்னை இது பேரல்ல
எந்தன் கொண்டாட்டம்


அனாத ஆனமத்தா யாருமில்ல
டவுட்டு வருமுனு பேச்சேயில்ல
ஏடிம் மெஷினுக்குள்ளே காசே இல்ல
ஏழையா ஆனோமடா நிமிஷத்துல

ஐடி பில்டு சேவையை செய்ய
பேட்டி எடுத்த நியூஸ் சேனல் எந்த மொழின்னு தெரியல
யூத் கைஸ்ம் போலீஸ் பாயிசும் வீட்டுக்கு தான் போகல
நைட் பகலும் உழைச்சாங்க எங்களுக்கு மழையில

சீனாச்சு சீன் ஆச்சு
மச்சான் பக்காவா சரியாச்சு மக்களோட மனசாச்சு
கோளாச்சு ஏழாச்சு
இப்போ சாமிக்கும் பூமிக்கும் சாதி மதம் மறந்து போச்சுடா

குப்பத்துல கூவத்துல ஜனங்களதான் செப்டி பண்ண
பிஷ்சர்மெனு சோக்கு மாமு
வீட்டுக்குள்ள மாட்டிகினா புள்ளதாச்சி பொண்ணு ஒன்ன
காப்பாதின ஆர்மி டீமு

வந்த மழையால வளந்தது நேசம்
ஆனாலும் இங்கோ பல உயிர்களோ நாசம்
காக்க வந்த நல் உள்ளமெல்லாம்
மண்ணுக்குள்ள அத என்ன சொல்ல
மனம் சோகத்துல சொல்ல வார்த்தயில்ல


ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்

ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்
ஒரு நாள் அலையாய் சீறுமே
விழுந்தால் உடனே எழுந்திடுவோம்

தன்ன பின்ன வச்சி இந்த ஊரே என் சொந்தமென்னு
நினைக்கும் உணர்வே சென்னை
சாதி மதம் தாண்டி தெரு நாய செடி கொடிய கூட
காக்கும் மனசே சென்னை


காலர தூக்குடா தோழா
சென்னை நாமேடா
ஹய் பைய் போடு நீ தோழி
சென்னை நாமேதான்


மழை பெய்தால் மரம் வளரும்
இங்கு மழை பெய்து மனிதம் வளர்கிறது

ஒரு கார்கில், ஒரு பூகம்பம், 
ஒரு சுனாமி, ஒரு மழை வெள்ளம்
இதில் ஏதாவது ஒன்னு  வந்தா தான் 
நாம் ஒன்னு சேரணுமா

Popular Posts