Friday, July 24, 2015

என்னை அறிந்தால் - உனக்கென்ன

படம்: என்னை அறிந்தால்  (2015)
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: பென்னி தியால், மஹதி
பாடல்வரிகள்: தாமரை




உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம் விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல


கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே


பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று... ஓ
தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

பாபநாசம் - ஏயா என் கோட்டிக்காரா

படம்: பாபநாசம் (2015)
இசை: M.ஜிப்ரான்
பாடியவர்: சுந்தர் நாராயணராவ், மாளவிகா
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்









ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டக்காராா
குத்தால சாரல் போல் தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோட்டுக்காரா

யே எட்டி என் கோட்டிக்காரி

அடி ஏளா என் வேட்டக்காரி
குத்தால சாரல் போல் தல தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோட்டுக்காரி

தேடி சேத்த காசு போல் காதல் இருக்குதா

கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா

காசப்போல காதலும் செலவுக்கில்லட்டி

கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி


சின்னப்புள்ள நான்தான் பெண்ணே உண்மையல்லோ

என்ன தாங்க இப்போ மூணு அம்மையல்லோ

பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும் உன் நேசத்தின் 

முன்னே முன்னே தோத்தே போகும் மண்ணில் சொர்கமிது

ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டக்காராா
குத்தால சாரல் போல் தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோட்டுக்காரா

காசப்போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி


தட்டான் பூச்சி போல வண்ணம் அள்ளி தாரே

கண்ணில் இன்னும் வேற ஏதோ சொல்லி தாரே

நான் நினைச்சதும் நீ நினைச்சதும் நூழிலையில் தான் வழுக்கிட

பேசி பேசி இன்னும் பேசி பேசாநிலை வருமோ

தேடி சேத்த காசு போல் காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா

காசப்போல காதலும் செலவுக்கில்லட்டி

கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி

Popular Posts