Friday, April 10, 2015

மோக முள் - சொல்லாயோ வாய் திறந்து

படம் : மோகமுள் (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.ஜானகி
பாடல்வரிகள் : வாலி







சொல்லாயோ வாய் திறந்து?
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து
ஊ....ஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து?
போதும் இனி கண்ணான கண்ணா உன் பொல்லாத லீலை?
சொல்லாயோ வாய் திறந்து?


ஆகாய சூரியன் மேற்கினில் சாய
ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
தூண்டிலில் புழுவாக திருமேனி வாட
தாமதம் இனி ஏனோ இருமேனி கூட
அந்தி வரும் தென்றல் சுடும்
ஓர் விரகம் விரகம் எழும்
என்று வரும் இன்ப சுகம்
ஊன் உருகும் உருகும் தினம்
நாள் முழுதும் ஒவ்வோர் பொழுதும்
உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிறைந்திடும்

சொல்லாயோ வாய் திறந்து?
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து?
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து


நாள் தோறும் பார்வையில் நான் விடும் தூது
கூறாதோ நான் படும் பாடுகள் நூறு
நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட
ஏழையை விடலாமோ இது போல வாட
வெள்ளி நிற வெண்ணிலவில் வேங்குழலின் இசையும் வரும்
நள்ளிரவில் மெல்லிசையில் தேனலைகள் நினைவில் எழும்
ஓர் இதயம் உன்னால் இளகும்
இந்நேரத்தில் கண்ணா உன் மௌனத்தை தவிர்த்து

சொல்வாயோ வாய் திறந்து?
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து?
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து

Popular Posts