Sunday, March 30, 2014

ரம்மி - கூட மேலே

படம்: ரம்மி (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடல்வரிகள்: யுகபாரதி




ஹா... ஹ.. ஹா...  ஹா... ஹா... 

கூட மேலே கூடவச்சு கூடலூரு போறவளே…
ஒங்கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிக்கிட்டு போனா என்ன…
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா
நீ வாயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா…
நீ வேணானு சொன்னாலே போவேடி சேதாரமா…


கூட மேலே கூடவச்சு கூடலூரு போறவள…
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
துவக்கள தேச்சி வச்சா துரு ஏறுமா
நான் போறேனே சொல்லாம வாரேனே ஒன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா…


சாதத்துல கல்லு போல
நெஞ்சிக்குள்ள நீ இருந்து
சரிக்காம சதி பண்ணுற

சீயக்காய போல கண்ணில்
சிக்கி கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர கொல்லுற

அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சடை பின்னுற

சல்லி வேர ஆணி வேராக்குற
செத்த பூவ வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற

கூட மேலே கூடவச்சு
கூடலூரு போறவளே

நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன


ஹேஹே... ஹே... ஹே... ஹேய்...
எங்கேவேனா போய்க்க நீ
என்ன விட்டு போய்டாம
இருந்தாலே அது போதுமே

தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுனா
தரைமேல தலை சாயுமே

மறஞ்சி போனாலும் மறந்து போகாத
நினைப்புத்தான் சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்கத்தான் இன்பமே

நீ பாக்காம போனாலே
கெடையாது மறுஜெம்மமே

ஹா.. ஹா... ஹா.. ஹா... 

கூட மேலே கூடவச்சு
ம்... ஹ... கூடலூரு... கூடலூரு போறவளே... 

ம்... நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

ஓ... ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா

நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா


Popular Posts