Friday, August 9, 2013

அமைதிப்படை - சொல்லிவிடு

படம்: அமைதிப்படை (1994)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பாடல்வரிகள்: வாலி

AmaidhiPadaifilm.jpg



சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா... ஓ...
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போனபின்
நானே என்னை தேற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா... ஓ...
கனவுகள் கலைந்திடுமா...


உன்னை ஒருபோதும் உள்ளம் மறவாது
நான் தான் வாழ்ந்தேன்... ஓஓ... ஓஓ...
குற்றம் புரியாது துன்பகடல் மீது
ஏன் நான் வீழ்ந்தேன்... ஓஓ... ஓஓ...

அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை...
ஓஓ... வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா... ஓ...
கனவுகள் கலைந்திடுமா...
உறவுகள் கசந்திடுமா... ஓ...
கனவுகள் கலைந்திடுமா...


தொட்டகுறை யாவும் விட்டகுறையாகும்
வேண்டாம் காதல்... ஓஓ... ஓஓ...
எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு
ஏனோ கூடல்... ஓஓ... ஓஓ...

உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா... ஓ...
கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா... ஓ...
கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள் கசந்திடுமா... ஓ...
கனவுகள் கலைந்திடுமா...


Tuesday, August 6, 2013

Jodha Akbar - Ithayam Idam Mariyathe

படம் : ஜோதா அக்பர் (2008)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : கார்த்திக், K.S.சித்ரா

பாடல்வரிகள்: நா.முத்துகுமார்






இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ
என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
ஓஓ... மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்
கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ


செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ

அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ

செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ 

அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து  இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது  இதயமும் நகர்ந்தது ஓ....

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே


அலை பாயும் காதலே அணையாத தீயா

வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா
இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம்
அதைப் போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
உள்ளம் சாய்ந்ததே காதலின் கால் தடம் தந்ததும் தீயா
தந்ததும் தீயா தீயை தொட்டு இரசித்தாய் வந்ததும் நீயா

ம்ம்... எந்தன் கனவில் ஒர் பூந்தோட்டம்

பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே

புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ

இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ
இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ....

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ



Friday, August 2, 2013

மரியான் - இன்னும் கொஞ்சம்

படம் : மரியான் (2013)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள் : கபிலன், A.R.ரஹ்மான்






இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே


ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...
இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயே

நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல

வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல
உன் கண்ணுகேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம்

உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

ஹும்... இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே


கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேயா

என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே

இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது

உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே
இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே

இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்

நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கனும்


Popular Posts