Friday, July 8, 2011

தேநீர் விடுதி - என்னமோ என்னமோ


படம் : தேநீர் விடுதி (2011)
இசை : 
S.S.குமரன்
பாடியவர் : 
 S.S.குமரன், சின்மயி
பாடல் வரி : முருகன் மந்திரம்





ஒ... என்னமோ என்னமோ பண்ணுது புள்ள
எனக்கே ஏன்னு தெரியவில்ல
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு


யே.. வெள்ளையா இருந்த மனசுக்குள்ள
கலரா கனவு வருது உள்ளே
இது மொத்தமா சுத்தமா விளங்கவில்ல ஏன்டா


ஒ... ஹோ.. கட்ட மண்ணு மேல ஒரு மேல ஒரு
பவள பவள மல்லி பூத்து நிக்குதே


பந்தலுக்கு நட்டுவச்ச நட்டுவச்ச
கம்பு கம்பு அது சாய்ஞ்சி நிக்குது


என்னவோ ஆகி போச்சி....
..... என்னவோ என்னவோ பண்ணுது புள்ள
சரியா தவறா தெரியவில்ல
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு


ஆ... நீராக பார்த்ததுமே
நூறாக நான் முறிஞ்சேன்
கண்ணோரம் வலியில்ல
கனவுல நனைஞ்சி நனைஞ்சி மிதந்தேன்


தோதான ஒரு நொடியில்
தோள்மேல நான் சரிஞ்சேன்
பொல்லாத உதடுகள் உண்மையுற
உலற உலற தவிச்சேன்


நீ பார்த்ததும் காற்று போல
மனசு லேசா பறந்து போச்சே


நீ நெருக்கமா நடக்கும் போது
கால்கள் ஏதோ குழம்பி போச்சே
என்னை நீயும் உன்னை நானும் தேடிப் பார்த்தோம்

என்னமோ ஒ... என்னமோ.... ஒ.... ஒ.....


ஏ... குத்தடி குத்தடி கோவ கொய்யக்கா
கத்திரி கித்திரி கார பாவக்கா
வெள்ளரி கிள்ளரி வேற என்னக்கா
கோவக்கா...


சிங்கலா போக போறா சின்ன பொண்ணு
இனி டபுள்லா பெத்தேடுப்பா கூட ஒன்னு
ரெட்டையா பெத்துக்கொடு செல்லமே... செல்லமே...


குட்டி... குட்டி... குட்டி... குட்டி....
கும்ப கும்பா பாப்பா


எட்டி.... எட்டி... எட்டி... எட்டி...
சீக்கிரமா வாப்பா....

Popular Posts